Posts

Showing posts with the label நாடகம் (Natagam)

வீர சிவாஜி வசனம் (Sivaji Ganesan as Chathrapathi Shivaji)

Image
படம்: ராமன் எத்தனை ராமனடி நாடகம்: வீர சிவாஜி அரசே! தங்களின் முடிசூட்டு விழாவிற்கு ஒரு தடைவிழுந்திருக்கிறது ஏன்! மகுடம் தயாராகவில்லையா இல்லை! பிறகு! காரணம் தாங்கள் தாழ்ந்த ஜாதியாம் அரசியலையே அறிய மாட்டிர்களாம் அதனால் முடிசூட்டி கொள்ள முடியாதாம் தாழ்ந்த ஜாதி? அரசியலை அறியாதவன்? ம்ம்ஹு யார்? தானும் நாடும் ஒன்றென கண்டு தன்னையே தந்த மன்னன் சிவாஜி! தாழ்ந்த ஜாதியா? மன்னர் குலத்து மகுடம் தாங்க முடியாதா தார்தாரியர் தந்த புரவியில் அமர்ந்து ஆற்றெழுந்த சிவாஜியை கண்டு நாட்டுக்குடைய நல்லவனென்றும் போர் வாட்டு முழக்கும் மன்னவனென்றும் ஆரத்தி எடுத்த மக்களெங்கே ஓரத்தில் நின்று வெற்றி வரட்டும் அதன் சாரத்தை அனுபவிப்போம் என்று காத்திருந்த இந்த ஆணவக்காரர்கள் எங்கே உரைத்து வாளெடுத்த ஒவ்வொரு கணமும் மராட்டியம் மராட்டியம் என்றே முழங்கி இறை அடிக்க துடித்த வேங்கை போல் எங்கே பகைவர் எங்கே பகைவர் என்று தேடி கறைபடியாத என் அன்னை நாட்டை காப்பேன் காப்பேன் என சூளுரைத்து இந்த நாடு என் சொந்த நாடு இந்த மக்கள் என் சொந்த மக்கள் உயிரினும் இனிய என் மக்களுக்காக ஓடினேன் பகைவரை தேடினேன் வாள...

சேரன் செங்குட்டுவன் புறக்காட்சி உரைநடை (Sivaji Ganesan as Cheran Chenguttuvan)

Image
சேரன் செங்குட்டுவன் புறக்காட்சி உரைநடை படம்: ராஜ ராணி சுவையான கதை ஒன்று சொல்லுங்கள் அத்தான் சொல்லட்டுமா சோழர் மகளை சேரன் மணந்தான் சேரனுக்கோர் செல்வன் பிறந்தான் செல்வன் இந்த சிலையை மணந்தான் தெரிந்த கதைதானே இது நடந்த கதை கூட நடக்காத கதையொன்று சொல்லுங்கள் அத்தான் சுவைக்காது கண்ணே அது ஆங் காதல் கதையொன்று.. ஆகா இதோ புறநானூற்றில் போதும் வீரக்கதைதானே வீரத்தை மணந்த காதல் கதை தந்தையையும் கணவனையும் போரிலே பலி கொடுத்த பெண்ணொருத்தி தன் மகனையும் போருக்கு அனுப்பிய புறக்காட்சி வேண்மாள் கொஞ்சம் கேளேன் நானே எழுதி இருக்கிறேன் புதிய நடையில் காவிரி தந்த தமிழகத்து புதுமணலில் களமமைத்து சேர சோழ பாண்டி மன்னர் கோபுரத்து கலசத்தில் யார் கொடி தான் பறப்பதென்று இன்று போல் போர் தொடுத்து கொண்டிருந்த காலமது அந்நாளில் ஓர் களத்தில் தாய்நாடு காக்க தாவிப்பாய்ந்த்து செத்தான் தந்தையென்ற செய்தி கேட்டு தணல்வீழ் மெழுகானாள் தமிழகத்து கிளியொருத்தி அனல்போலும் கண்ணுடனே அயலூர் சென்றிட்ட அவள் கணவனும் வந்திட்டான் புனல்போக்கும் விழியாலே அவள் போர்ச்செய்தி தந்திட்டாள் தந்தை களம்பட்ட செய்திக்கோ த...

சாக்ரடீஸ் நாடகம் (Socrates - Sivaji Ganesan as Socrates)

Image
சாக்ரடீஸ் நாடகம் முதல் காட்சி சாக்ரடீஸ்: உன்னையே நீ அறிவாய்!! உன்னையே நீ அறிவாய்!! கிரேக்கத்தின் கீர்த்தி புவனம் அறியாததல்ல அதற்காக இங்கே விழுந்திருக்கும் கீறல்களை மறைத்திட முயலுவது புண்ணுக்கு புனுகு தடவு வேலையை போன்றது அதனால் தான் தோழர்களே சிந்திக்க கற்றுகொள்ளுங்கள் என்று சிரம் தாழ்த்தி உங்களை அழைக்கிறேன் அறிவு! அறிவு! அகிலத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அதை தேடி பெறுவதற்காக உங்களை அழைக்கிறேன் உன்னையே நீ அறிவாய்!! இந்த உபதேசத்தின் உண்மைகளை உணர்வதர்க்காகத்தான் என் உயிரினும் இனியவர்களே உங்களையெல்லாம் அழைக்கிறேன் ஏற்றமிகு ஏதன்சு நகர எழில்மிக்க வாலிபர்களே! நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம் கமிழ்விக்க இதோ சாக்ரடீஸ் அழைக்கிறேன் ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்! வீரம் விலை போகாது விவேகம் துணைக்கு வராவிட்டால் தீட்டிய வாளும் தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மட்டும் போதாது தீரர்களே இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் எடுத்து கொள்ளுங்கள் அறிவாயுதம்! அறிவாயுதம்! அகிலத்தின் அணையாத ஜோதி மெலிடஸ்: ஹஹ ஹஹ.. அறிவாயுதமாம் அனைத்துலகும் அடிபணியும் அஸ்திரமாம் குமுறும் எரிம...