வீர சிவாஜி வசனம் (Sivaji Ganesan as Chathrapathi Shivaji)
படம்: ராமன் எத்தனை ராமனடி
நாடகம்: வீர சிவாஜி
அரசே! தங்களின் முடிசூட்டு விழாவிற்கு ஒரு தடைவிழுந்திருக்கிறது
ஏன்! மகுடம் தயாராகவில்லையா
இல்லை!
பிறகு! காரணம்
தாங்கள் தாழ்ந்த ஜாதியாம்
அரசியலையே அறிய மாட்டிர்களாம்
அதனால் முடிசூட்டி கொள்ள முடியாதாம்
தாழ்ந்த ஜாதி?
அரசியலை அறியாதவன்?
ம்ம்ஹு
யார்?
தானும் நாடும் ஒன்றென கண்டு
தன்னையே தந்த மன்னன் சிவாஜி! தாழ்ந்த ஜாதியா?
மன்னர் குலத்து மகுடம் தாங்க முடியாதா
தார்தாரியர் தந்த புரவியில் அமர்ந்து
ஆற்றெழுந்த சிவாஜியை கண்டு
நாட்டுக்குடைய நல்லவனென்றும்
போர் வாட்டு முழக்கும் மன்னவனென்றும்
ஆரத்தி எடுத்த மக்களெங்கே
ஓரத்தில் நின்று வெற்றி வரட்டும்
அதன் சாரத்தை அனுபவிப்போம் என்று காத்திருந்த இந்த ஆணவக்காரர்கள் எங்கே
உரைத்து வாளெடுத்த ஒவ்வொரு கணமும்
மராட்டியம் மராட்டியம் என்றே முழங்கி
இறை அடிக்க துடித்த வேங்கை போல்
எங்கே பகைவர் எங்கே பகைவர் என்று தேடி
கறைபடியாத என் அன்னை நாட்டை காப்பேன் காப்பேன் என சூளுரைத்து
இந்த நாடு என் சொந்த நாடு
இந்த மக்கள் என் சொந்த மக்கள்
உயிரினும் இனிய என் மக்களுக்காக ஓடினேன்
பகைவரை தேடினேன்
வாள் கொண்டு சாடினேன்
வெற்றியை நாடினேன்
பகை தேடி வெல்ல மட்டும் உரிமை உண்டாம்
முடிசூடிக்கொள்ள மட்டும் தடை செய்வானாம்
அரசியலை நான் அறியாதவனா ஹங்
அரசு வித்தைகள் புரியாதவனா ஹ ஹங்
எவனோ வந்தவன் சொன்ன வாய்ப்பறை கேட்டு
நொந்து போக நான் நோயாளியல்ல
என்னைவிட்டொருவன் இந்த தரணியாளும் தகுதி அடைந்தது விட்டானா
ஏமாந்த மக்களிடம் ஏற்றம் கொண்டு
நாமே தான் நாடென்று தலை கிறுக்கி திரியும் அந்த புல்லுருவிகள்
எனது முடியை தடுக்கின்றார்களா அல்லது
தங்கள் முடிவை தேடுகின்றார்களா
அதோ போர்நா
கொட்டிய முரசும் கூவிய படையும் எட்டிய புரியும் எழுந்து நடந்து
கோட்டை மதிலை சுற்றி வளைத்து வேட்டையாடி வெற்றி படைத்து
வாழ்க சிவாஜி வாழ்கவென்று வணங்கிய போது ஓ..வென்று எதிரொலித்ததே
இந்த கோட்டை தான்
அதோ புறந்தர்
போகாதீர்கள் படை பலம் அதிகம்
கோட்டை முன்னால் தடைகளும் அதிகம்
ஒற்றன் தடுத்தான் ஒருநாள் என்னை
இடுபொடிந்தோர் எல்லாம் இல்லத்தில் இருங்கள்
கோழைகள் விலக வீரர்கள் வரட்டும்
ஏறுமுன்னேறு என எக்காளமிட்டு
பகைவர் தலைகளை கனியென கொய்து
முரசம் ஒலித்து நான் முழக்கிய கோட்டை இதுதான் புறந்தர் இதுதான்
அதோ ராஜகிரி
ஆடுவார் ஆட்டமும் பாடுவார் பாட்டுமாய் அந்நியர் களித்திருக்க
யாரது மண்ணிலே யாரது நாடகம் பாப்போம் என்று நான் படையெடுக்க
என்னடா முடியும் உன்னால் என்று என் எதிரிகள் கொக்கரிக்க
இதுவும் முடியும் இன்னமும் முடியும் என்று நான் வாளெடுக்க
பெட்டையர் கூட்டம் உள்ளம் கலங்க
மராட்டிய மண்டல மக்கள் களிக்க
நான் கட்டிக்காத்த கோட்டை இதுதான்
அதோ கல்யாண்
கண்ணீர் விட்டு கதறிய பெண்கள்
ஐயோ என்று அலறிய குழந்தைகள்
முடிவெறியாது தவித்த முதியோர்
கொடியோர் கையில் சிக்கி கிடந்தனர்
பகைவர் பொடிப்பொடியாக போர்க்களம் ஏந்தி
மராட்டிய கோடியை நான் ஏத்திய கோட்டை இது தான்
என்னயா கேட்டார்கள் நீயாரென்று
எவன் இந்த மண்ணுக்கு சொந்தக்காரனோ
எவன் இந்த மண்டலத்தின் காவலனோ
எவனது நெற்றியில் ஏப்போதும் ரத்தத்திலகம் திகழ்ந்து கொன்டேயிருக்குமோ
அவனை பார்த்து
வாழ வந்த வஞ்சகர் கூட்டம்
மக்களின் மடமையை கொன்டே வளரும் கூட்டம்
கேலி பேசுகிறதாம்
தாழ்ந்த ஜாதி
அரசியல் அறியாதவனென்று
இதுதான் முடிவென்றால்
இல்லையெனக்கு முடியென்றால்
நான் காத்த கோட்டைகள் வேண்டுமோ
கொத்தளங்கள் வேண்டுமோ
வெற்றி பாட்டு வேண்டுமோ
பரவசம் வேண்டுமோ
கரையான் புற்று என்ன கரு நாகங்களுக்கு சொந்தமோ
அழியட்டும் கோட்டைகள்
இடியட்டும் மதில் சுவர்கள்
அன்னை பவானி
அன்னை பவானி
உன் கண்கள் சிவக்கட்டும்
மின்னல் ஒளிரட்டும்
இடிஇடிக்கட்டும்
சூறைக்காற்று மோதட்டும்
கொடிமழை பெய்யட்டும்
கொடியவர்கள் அழியட்டும்
கொடியவர்கள் அழியட்டும்
கொடியவர்கள் அழியட்டும்
கொடியவர்கள் அழியட்டும்
நாடகம்: வீர சிவாஜி
அரசே! தங்களின் முடிசூட்டு விழாவிற்கு ஒரு தடைவிழுந்திருக்கிறது
ஏன்! மகுடம் தயாராகவில்லையா
இல்லை!
பிறகு! காரணம்
தாங்கள் தாழ்ந்த ஜாதியாம்
அரசியலையே அறிய மாட்டிர்களாம்
அதனால் முடிசூட்டி கொள்ள முடியாதாம்
தாழ்ந்த ஜாதி?
அரசியலை அறியாதவன்?
ம்ம்ஹு
யார்?
தானும் நாடும் ஒன்றென கண்டு
தன்னையே தந்த மன்னன் சிவாஜி! தாழ்ந்த ஜாதியா?
மன்னர் குலத்து மகுடம் தாங்க முடியாதா
தார்தாரியர் தந்த புரவியில் அமர்ந்து
ஆற்றெழுந்த சிவாஜியை கண்டு
நாட்டுக்குடைய நல்லவனென்றும்
போர் வாட்டு முழக்கும் மன்னவனென்றும்
ஆரத்தி எடுத்த மக்களெங்கே
ஓரத்தில் நின்று வெற்றி வரட்டும்
அதன் சாரத்தை அனுபவிப்போம் என்று காத்திருந்த இந்த ஆணவக்காரர்கள் எங்கே
உரைத்து வாளெடுத்த ஒவ்வொரு கணமும்
மராட்டியம் மராட்டியம் என்றே முழங்கி
இறை அடிக்க துடித்த வேங்கை போல்
எங்கே பகைவர் எங்கே பகைவர் என்று தேடி
கறைபடியாத என் அன்னை நாட்டை காப்பேன் காப்பேன் என சூளுரைத்து
இந்த நாடு என் சொந்த நாடு
இந்த மக்கள் என் சொந்த மக்கள்
உயிரினும் இனிய என் மக்களுக்காக ஓடினேன்
பகைவரை தேடினேன்
வாள் கொண்டு சாடினேன்
வெற்றியை நாடினேன்
பகை தேடி வெல்ல மட்டும் உரிமை உண்டாம்
முடிசூடிக்கொள்ள மட்டும் தடை செய்வானாம்
அரசியலை நான் அறியாதவனா ஹங்
அரசு வித்தைகள் புரியாதவனா ஹ ஹங்
எவனோ வந்தவன் சொன்ன வாய்ப்பறை கேட்டு
நொந்து போக நான் நோயாளியல்ல
என்னைவிட்டொருவன் இந்த தரணியாளும் தகுதி அடைந்தது விட்டானா
ஏமாந்த மக்களிடம் ஏற்றம் கொண்டு
நாமே தான் நாடென்று தலை கிறுக்கி திரியும் அந்த புல்லுருவிகள்
எனது முடியை தடுக்கின்றார்களா அல்லது
தங்கள் முடிவை தேடுகின்றார்களா
அதோ போர்நா
கொட்டிய முரசும் கூவிய படையும் எட்டிய புரியும் எழுந்து நடந்து
கோட்டை மதிலை சுற்றி வளைத்து வேட்டையாடி வெற்றி படைத்து
வாழ்க சிவாஜி வாழ்கவென்று வணங்கிய போது ஓ..வென்று எதிரொலித்ததே
இந்த கோட்டை தான்
அதோ புறந்தர்
போகாதீர்கள் படை பலம் அதிகம்
கோட்டை முன்னால் தடைகளும் அதிகம்
ஒற்றன் தடுத்தான் ஒருநாள் என்னை
இடுபொடிந்தோர் எல்லாம் இல்லத்தில் இருங்கள்
கோழைகள் விலக வீரர்கள் வரட்டும்
ஏறுமுன்னேறு என எக்காளமிட்டு
பகைவர் தலைகளை கனியென கொய்து
முரசம் ஒலித்து நான் முழக்கிய கோட்டை இதுதான் புறந்தர் இதுதான்
அதோ ராஜகிரி
ஆடுவார் ஆட்டமும் பாடுவார் பாட்டுமாய் அந்நியர் களித்திருக்க
யாரது மண்ணிலே யாரது நாடகம் பாப்போம் என்று நான் படையெடுக்க
என்னடா முடியும் உன்னால் என்று என் எதிரிகள் கொக்கரிக்க
இதுவும் முடியும் இன்னமும் முடியும் என்று நான் வாளெடுக்க
பெட்டையர் கூட்டம் உள்ளம் கலங்க
மராட்டிய மண்டல மக்கள் களிக்க
நான் கட்டிக்காத்த கோட்டை இதுதான்
அதோ கல்யாண்
கண்ணீர் விட்டு கதறிய பெண்கள்
ஐயோ என்று அலறிய குழந்தைகள்
முடிவெறியாது தவித்த முதியோர்
கொடியோர் கையில் சிக்கி கிடந்தனர்
பகைவர் பொடிப்பொடியாக போர்க்களம் ஏந்தி
மராட்டிய கோடியை நான் ஏத்திய கோட்டை இது தான்
என்னயா கேட்டார்கள் நீயாரென்று
எவன் இந்த மண்ணுக்கு சொந்தக்காரனோ
எவன் இந்த மண்டலத்தின் காவலனோ
எவனது நெற்றியில் ஏப்போதும் ரத்தத்திலகம் திகழ்ந்து கொன்டேயிருக்குமோ
அவனை பார்த்து
வாழ வந்த வஞ்சகர் கூட்டம்
மக்களின் மடமையை கொன்டே வளரும் கூட்டம்
கேலி பேசுகிறதாம்
தாழ்ந்த ஜாதி
அரசியல் அறியாதவனென்று
இதுதான் முடிவென்றால்
இல்லையெனக்கு முடியென்றால்
நான் காத்த கோட்டைகள் வேண்டுமோ
கொத்தளங்கள் வேண்டுமோ
வெற்றி பாட்டு வேண்டுமோ
பரவசம் வேண்டுமோ
கரையான் புற்று என்ன கரு நாகங்களுக்கு சொந்தமோ
அழியட்டும் கோட்டைகள்
இடியட்டும் மதில் சுவர்கள்
அன்னை பவானி
அன்னை பவானி
உன் கண்கள் சிவக்கட்டும்
மின்னல் ஒளிரட்டும்
இடிஇடிக்கட்டும்
சூறைக்காற்று மோதட்டும்
கொடிமழை பெய்யட்டும்
கொடியவர்கள் அழியட்டும்
கொடியவர்கள் அழியட்டும்
கொடியவர்கள் அழியட்டும்
கொடியவர்கள் அழியட்டும்
படிக்க அவ்வளோ அழகா இருக்கு��
ReplyDeleteஇந்த வசனம் பேசி நிறைய பரிசுகளும் பாராட்டும் பெற்றுள்ளேன்
ReplyDeleteGreat!!
DeleteSuuuuuuper
ReplyDelete