Posts

Showing posts with the label Viyappu (வியப்பு)

என்மேல் விழுந்த மழை துளியே (En mel vizhuntha maizhaithuliyae)

Image
படம்: May மாதம் உணர்வு: ஏக்கம், வியப்பு ஆக்கம்: வைரமுத்து என்மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் உனக்குள் தானே நானிருந்தேன் என்மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் மண்ணை திறந்தால் நீரிருக்கும் என் மனதை திறந்தால் நீ இருப்பாய் ஒளியை திறந்தால் இசை இருக்கும் என் உயிரை திறந்தால் நீ இருப்பாய் வானம் திறந்தால் மழை இருக்கும் என் வயதை திறந்தால் நீ இருப்பாய் இரவை திறந்தால் பகல் இருக்கும் என் இமையை திறந்தால் நீ இருப்பாய் என்மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இலை...

மோனோலிசா மோனோலிசா தேசம் (Monalisa Monalisa thaesam Mr. Romeo)

படம்: Mr. Romeo உணர்வு: வியப்பு, உற்சாகம் ஆக்கம்: வாலி பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், நாகூர் முகமது அலி மோனோலிசா மோனோலிசா தேசம் பேசும் மோனோலிசா மோனோலிசா மோனோலிசா தேசம் பேசும் மோனோலிசா அன்பே எந்நாளும் உன் voice  A/c  A/c  என்றும் நீ தானே No.1 Pepsi Pepsi நீயும் நான் வந்து உட்காரும் Gypsy Gypsy  என் நெஞ்சத்தை அரைக்கின்ற Mixie Mixie मेरे प्यारी प्यारी காதல் चोरी चोरी கண்ணால் நீ சொல்லு love என்னும் story story அன்பே எந்நாளும் உன் voice  A/c A/c   என்றும் நீ தானே No.1 Pepsi Pepsi நீயும் நான் வந்து உட்காரும் Gypsy Gypsy  என் நெஞ்சத்தை அரைக்கின்ற Mixie Mixie मेरे प्यारी प्यारी காதல் चोरी चोरी கண்ணால் நீ சொல்லு love என்னும் story story Atlanta Olympics தான் முடிந்தால் என்ன அன்பே நம் love games முடியாதம்மா Atlanta Olympics தான் முடிந்தால் என்ன அன்பே நம் love games முடியாதம்மா சார்லசும் டயானாவும் பிரிந்தாலென்ன Darling நம் love என்றும் பிரியாதம்மா நீ போதும் நான் வா...

காக்கை சிறகினிலே நந்தலாலா (Kakkai siraginilae nandalala)

படம்: ஏழாவது மனிதன் உணர்வு: வியப்பு ஆக்கம்: மகாகவி பாரதியார் காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோனுதையே நந்தலாலா காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோனுதையே நந்தலாலா பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சைநிறம் தோன்றுதையே நந்தலாலா பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சைநிறம் தோன்றுதையே நந்தலாலா கேட்க்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா நின்றன் கீதமிசைக்குதடா நந்தலாலா காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோனுதையே நந்தலாலா தீக்குள் விரலை வைத்தாய் நந்தலாலா நின்னை தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா நந்தலாலா நந்தலாலா

Alps மலை காற்று வந்து (Alps malai kaatru vanthu)

படம்: தேடினேன் வந்தது உணர்வு: வியப்பு பாடியவர்கள்: ஹரிஹரன், பவதாரிணி Alps மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே BBC செய்தியெல்லாம் நம்மை பேசுதே Michael Angeloவின் சிற்பம் எதிரில் நடந்து வந்ததென்ன Babylonன் தொங்கும் தோட்டம் பணியில் நனைந்து நின்றதென்ன உலகில் அதிசயங்கள் ஏழு அதிலேன் உன்னை சேர்க்கவில்லை உன் இளமை துள்ளும் அழகை Shelley Bysshe பாடவில்லை Alps மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே BBC செய்தியெல்லாம் நம்மை பேசுதே கிமு கிபி எல்லாம் பழசானது நம் காதல் காலம் என்றும் புதுசானது அட்சரேகை தீர்தரேகை உன்கையில் பார்க்கிறேன் DTS Dolby system உன்பேச்சில் கேட்கிறேன் நீ வந்து kiss தந்தா நெஞ்சுக்குள் கிஷ்கிந்தா காதல் தேசம் எந்த பக்கம் சொல்லு காதலின் Atlas நீ தானே Alps மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே BBC செய்தியெல்லாம் நம்மை பேசுதே முத்தம் சேர்க்கும் Swiss Bankஉ உன் கன்னமா காதலின் Disneylandஉ உன் நெஞ்சமா Miami beachஉ அலைகள் மனசுக்குள் அடிக்குதா Playboy jokeஉ சொல்ல ஆசைகள் துடிக்குதா நெஞ்சம் தான் ரெண்டாச்சு நீ தானே quickfixஉ HMTஇன் watchஐ போல காதல் நெஞ்...

நான் வானவில்லையே பார்த்தேன் (Naan vaanavillaiyae paarthaen)

படம்:  மூவேந்தர் உணர்வு: வியப்பு ஓ... நான் வானவில்லையே பார்த்தேன் அதை காணவில்லையே வேர்த்தேன் நான் வானவில்லையே பார்த்தேன் அதை காணவில்லையே வேர்த்தேன் ஒரு கோடி மின்னலை பார்வை ஜன்னலாய் வீச சொல்லியா கேட்டேன் இனி நிலவை பார்க்கவே மாட்டேன் கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென மயிலும் நடனமிடுமோ பூவிலாடிவரும் வண்டு இமையில் விழ கண்களாகி விடுமோ தேடி தின்று விட ஆசை கிள்ளுதடி தேனில் செய்த இதழோ மூடிவைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ பகல் நேரம் நிலவை பார்த்தது நானடி கண்ணம்மா முந்தானை வாசம் வந்ததது ஆறுதல் சொல்லம்மா விழி கண்டவர் கொஞ்சிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா நான் வானவில்லையே பார்த்தேன் அதை காணவில்லையே வேர்த்தேன் ஒரு கோடி மின்னலை பார்வை ஜன்னலாய் வீச சொல்லியா கேட்டேன் இனி நிலவை பார்க்கவே மாட்டேன் சேலை சூடி ஒரு சோலை போன வழி பூக்கள் சிந்தி விழுமோ பாலையான மனம் ஈரமானதடி பார்வை தந்த வரமோ பாதம்பட்ட இடம் சூடு கண்டு உனை நானும் கண்டுவிடுவேன் காதலான மழை சாரல் தூவிவிட மார்பில் ஒதுங்கிவிடுவேன் பொய்மானை தேடி சென்றது ராமனின் கண்ணம்மா மெய்மானே தேடி சென்றது மாறனின் நெஞ...

காலங்களில் அவள் வசந்தம் (Kaalangalil aval vasantham)

படம்: பாவ மன்னிப்பு உணர்வு: வியப்பு பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ் காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம் பறவைகளில் அவள் மணிபுறா பாடல்களில் அவள் தாலாட்டு ஓ.... பறவைகளில் அவள் மணிபுறா பாடல்களில் அவள் தாலாட்டு கனிகளிலே அவள் மாங்கனி கனிகளிலே அவள் மாங்கனி காற்றினிலே அவள் தென்றல் காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம் பால் போல் சிரிப்பது பிள்ளை அவள் பனி போல் அணைப்பதில் கன்னி பால் போல் சிரிப்பது பிள்ளை அவள் பனி போல் அணைப்பதில் கன்னி கண் போல் வளர்ப்பதில் அன்னை கண் போல் வளர்ப்பதில் அன்னை அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம்

பழமுதிர் சோலை எனக்காக தான் (Pazhamuthir solai)

படம்: வருஷம் 16 உணர்வு: வியப்பு, பாசம் பழமுதிர் சோலை எனக்காக தான் படைத்தவன் படைத்தான் அதற்காக தான் நான் தான் அதன் ராகம் தாளமும் கேட்டேன் தினம் காலை மாலையும் நான் தான் அதன் ராகம் தாளமும் கேட்டேன் தினம் காலை மாலையும் கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம் பழமுதிர் சோலை எனக்காக தான் படைத்தவன் படைத்தான் அதற்காக தான் தூரத்தில் போகின்ற மேகங்களே தூறல்கள் போடுங்கள் பூமியிலே வேர் கொண்ட பூஞ்சோலை நீர் கொண்டு ஆட ஏரியில் மீன் கோதும் நாரைகளே இறகுகள் எனக்கில்லை தாருங்களேன் ஊர் விட்டு ஊர்சென்று காவியம் பாட பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும் பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும் ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே பழமுதிர் சோலை எனக்காக தான் படைத்தவன் படைத்தான் அதற்காக தான் பந்தங்கள் யாவும் தொடர்கதை போல் நாளும் வளர்ந்திடும் நினைவுகளால் நூலிடை போலிங்கு நெருங்கிய இதயங்கள் பாலுடன் நெய்யுடன் கலந்திடும் நாள் தந்தையும் தாயும் மகிழ்ந்து குழவி சிந்தை இனித்திட உறவுகள் மேவி பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே மண்ணில் இதைவிட சொர்க்கம் எங்கே நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை...

இளைய நிலா பொழிகிறதே (Ilaya nila pozhigirathae)

படம்: பயணங்கள் முடிவதில்லை உணர்வு: வியப்பு இளைய நிலா பொழிகிறதே  இதயம் வரை நனைகிறதே உலாபோகும் மேகம் கனா காணுமே  விழா காணுமே வானமே இளைய நிலா பொழிகிறதே  இதயம் வரை நனைகிறதே உலாபோகும் மேகம் கனா காணுமே விழா காணுமே வானமே இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே வரும் வழியில் பனிமழையில் பருவ நிலா தினம் நனையும் முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும் வரும் வழியில் பனிமழையில் பருவ நிலா தினம் நனையும் முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும் வானவீதியில் மேக ஊர்வலம் காணும் போதிலே ஆறுதல் தரும் பருவமகள் விழிகளிலே கனவு வரும் இளைய நிலா பொழிகிறதே உலாபோகும் மேகம் கனா காணுமே விழா காணுமே வானமே இளைய நிலா பொழிகிறதே முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ நீலவானிலே வெள்ளி ஓடைகள் ஓடுகின்றதே என்ன ஜாடைகள் விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள் இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே உலாபோகும் மேகம் கனா ...

மார்கழி பூவே மார்கழி பூவே (Margali poovae)

படம்: மே மாதம் உணர்வு: வியப்பு, ஏக்கம் மார்கழி பூவே மார்கழி பூவே உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும் மார்கழி பூவே மார்கழி பூவே உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும் மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை மார்கழி பூவே மார்கழி பூவே உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும் பூக்களை பிரித்து புத்தகம் படித்தேன் புல்வெளி கண்டால் முயல் போல் குதித்தேன் நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன் நடைபாதை கடையில் தேநீர் குடிப்பேன் வாழ்கையின் ஒரு பாதி நான் இங்கு வசிப்பேன் வாழ்கையின் மறுபாதி நான் இங்கு ரசிப்பேன் காற்றில் ஒரு மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன் காவிரி மணலில் கால் வைத்து நடந்ததுமில்லை கடற்கரை அலையில் கால் வைத்ததில்லை சுதந்திர வானில் பறந்ததுமில்லை சுடச்சுட மழையில் நனைந்ததுமில்லை சாலையில் நானாக போனதுமில்லை சமையத்தில் நானாக ஆனதுமில்லை ஏழை மகள் காணும் இன்பம் நான் கண்டதில்லை மார்கழி பூவே மார்கழி பூவே உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும் மார்கழி பூவே மார்கழி பூவே உன் மடி ...

காத்து காத்து தினம் (Kaathu kaathu dhinam)

படம்: உழவன் உணர்வு: வியப்பு, தன்னம்பிக்கை ஆக்கம்: வாலி மொட்டவிழ்ந்த சிறுபூக்கள் ஒரு மெட்டெடுத்து இசை பாட சொட்டுகின்ற புது தேனி இளவண்டு வந்து விளையாட காத்து காத்து தினம் காத்து ஒரு காத்தும் வந்தாச்சு பாத்து பாத்து எதிர்ப்பாத்து ஒரு பாட்டும் வந்தாச்சு காதோரம் பாட்டு சத்தம் காலை மாலை கேட்கும் காட்டோரம் பாட்டு கேட்டு நூறு பூக்கள் பூக்கும் தொடுவானம் தொட போகும் போது தூரம் தூரம் போகும் இருந்தாலும் அதை தீண்டி பார்க்கும் காலம் வந்து சேரும் காத்து காத்து தினம் காத்து ஒரு காத்தும் வந்தாச்சு பாத்து பாத்து எதிர்ப்பாத்து ஒரு பாட்டும் வந்தாச்சு மொட்டு, பொன்னந்தி நேரம் பூவாவது பூவு, பின்னாளில் நூறு பிஞ்சாவது பிஞ்சு, மெல்லத்தான் முத்தி காயாவது காய், தித்திக்கும் நல்ல கனியாவது நான் போட்ட தோட்டங்கள் பிள்ளைகள் கூட்டங்கள் பூவாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகி நானொரு தென்றல் என்று பாடிடும் பாடல் ஒன்று காலை மாலை இனிமையே காத்து காத்து தினம் காத்து ஒரு காத்தும் வந்தாச்சு பாத்து பாத்து எதிர்ப்பாத்து ஒரு பாட்டும் வந்தாச்சு காதோரம் பாட்டு சத்தம் காலை மாலை கேட்கு...

கண்மூடி திறக்கும் போது (Kanmoodi thirakkum)

படம்: Sachien உணர்வு: வியப்பு கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே குடையில்லா நேரம் பார்த்து கொட்டி போகும் மழையை போல அழகாலே என்னை நனைத்து இது தான் காதல் என்றாளே தெருமுனையை தாண்டும் வரையில் வெறும் நாள் தான் என்றிருந்தேன் தேவதையை பார்த்தும் இன்று திருநாள் என்கிறேன் அழகான விபத்தில் இன்று ஐயோ நான் மாட்டி கொண்டேன் தப்பிக்க வழிகள் இருந்தும் வேண்டாம் என்றேன் ஓஓஓஓ ஓஹோ ஓஓஓஓ..... உன் பேரும் தெரியாதே உன் ஊரும் தெரியாதே அழகான பறவைக்கு பேர் வேண்டுமா நீ என்னை பார்க்காமல் நான் உன்னை பார்கின்றேன் நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியும்மா உயிருக்குள் இன்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா இதயத்தில் மலையின் எடையை உணர்கின்றேன் காதல் இதுவா கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே வீதி உலா நீ வந்தால் தெருவிளக்கும் கண்ணடிக்கும் வீடு செல்ல சூரியனும் அடம் பிடிக்குமே நதியோடு நீ குளித்தால் மீனுக்கும் காய்ச்சல் வரும் உன்னை தொட்டு பார்க்க தான் மழை குதிக்குமே பூ...

செந்தாழம் பூவில் (Senthazham poovil)

படம்: முள்ளும் மலரும் உணர்வு: வியப்பு ஆக்கம்: வைரமுத்து செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா பூவாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம் வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நானா ஊடலோ ஆலம் கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசை குயில் பாஷையின்றி ராகமென்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள் பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைதான் ஆண்டவன் பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவின் ஆட்சி செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது மறவேன் மறவேன் அற்புத காட்சி செந்தாழம் பூவில் வந்...

பெண்ணல்ல பெண்ணல்ல (Pennalla pennalla)

படம்: உழவன் உணர்வு: வியப்பு ஆக்கம்: வாலி பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னிர்ப்பூமைவிழி ஜாடைகள் முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ சித்திரை மேனி தாழம்பூ சேலை அணியும் ஜாதிப்பூ சிற்றிடை மீது வாழைப்பூ ஜொலிக்கும் செண்பகப்பூ பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ தென்றலை போல நடப்பவள் என்னை தழுவ காத்து கிடப்பவள் செந்தமிழ் நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள் சிந்தையில் தாவும் பூங்கிளி அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி அஞ்சுகம் போல இருப்பவள் கொட்டும் அருவி போல சிரிப்பவள் மெல்லிய தாமரை காலெடுத்து நடையை பழகும் பூந்தேரு மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ சித்திரை மாத நிலவொளி அவள் சில்லென தீண்டும் பனித்துளி கொஞ்சிடும் பாத கொலுசுகள் அவை கொட்டிடும் காதல் முரசுகள் பழத்தை போல ...

மலையாள கரையோரம் (Malayala karaiyoram)

Image
படம்: ராஜாதி ராஜா உணர்வு: வியப்பு சிலுசிலுவென குளிர் அடிக்குது அடிக்குது சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது வனம் விட்டு வனம் வந்து மரங்கொத்தி பறவைகள் மனம் விட்டு சிரிக்கிறதே மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி மலைமுடியினில் பனி வடியுது வடியுது மண் மனக்குதம்மா கலையழகினில் மனம் கரையுது கரையுது கண் மயங்குதம்மா மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி நீரில் மெள்ள சிறு நெத்திலி துள்ள நீரோடை தாயை போல வாரி வாரி அள்ள நீலவானம் அதில் எத்தனை மேகம் நீர்கொண்டு காற்றில் ஏறி நீண்ட தூரம் போகும் காட்டோரம் மூங்கில் கூட்டம் வாசம் வீச காதோடு எதோ சொல்லி ஜாடை பேச தேக்கும் பாக்கும் கூடாதோ தோளை தொட்டு ஆடாதோ பார்க்க பார்க்க ஆனந்தம் போகப்போக வாராதோ என்மனம் துள்ளுது தன்வழி செல்லுது வண்ண வண்ண கோலம் மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி மலைமுடியினில் பனி வடியுது வடியுது மண் மனக்குதம்மா கலையழகினில் மனம் கரையுது கரையுது கண் மயங்குதம்மா மலையாள கரையோரம் தமிழ் ...

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி (Pennoruthi pennoruthi)

படம்: ஜெமினி உணர்வு: வியப்பு பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி வைத்தாய் உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய் நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய் நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய் என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய் பிரம்மா ஒ பிரம்மா இது தகுமா இது தகுமா ஐயோ இது வரமா சாபமா பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி வைத்தாய் உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய் கண்களிலே பௌத்தம் பார்த்தேன் கன்னத்தில் சமணம் பார்த்தேன் பார்வை மட்டும் கொலைகள் செய்ய பார்க்கிறேன் பற்களிலும் கருணை பார்த்தேன் பாதங்களில் தெய்வம் பார்த்தேன் புன்னகையோ உயிரை தின்ன பார்க்கிறேன் புயலென்று நினைத்தேன் என்னை புயல் கட்டும் கயிறாய் வந்தாய் மலையென்று நினைத்தேன் என்னை மல்லிகையால் மலையை சாய்த்தாய் நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே பிரம்மா ஒ பிரம்மா இது தகுமா இது தகுமா ஐயோ இது வரமா சாபமா பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி வைத்தாய் உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய் பகலெல்ல...

இருபது கோடி நிலவுகள் (irubathu kodi nilavugal)

படம்: துள்ளாத மனமும் துள்ளும் ஆக்கம்: வைரமுத்து இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ என் எதிரே வந்து புன்னகை செய்ய கண்ணும் கூசுதோ இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ என் எதிரே வந்து புன்னகை செய்ய கண்ணும் கூசுதோ குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ நெளிகின்ற வில்ரெண்டு புருவங்கள் ஆகாதோ நூறுகோடி பெண்கள் உண்டு உன்போல் யாரும் இல்லையே ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ என் எதிரே வந்து புன்னகை செய்ய கண்ணும் கூசுதோ தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன வனிதை உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ தேன் மிதக்கும் உதடு சேர்ந்து நிற்பதென்ன ஒன்றை ஒன்று முத்தம் இட்டு இன்பம் கொள்ளவோ மானிட பிறவி என்னடி மதிப்பு உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு நூறுகோடி பெண்கள் உண்டு உன்போல் யாரும் இல்லையே ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ என் எதிரே வந்து புன்னகை செய்ய கண்ணும் கூசுதோ July  மாதம் பூக்கும் கொன்றை பூக்கள் போல ...

ஒரு பொன்மானை (oru ponmaanai)

படம்: மைதிலி என்னை காதலி ஆக்கம்: டி. ராஜேந்தர் உணர்வு: வியப்பு ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம் ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம் சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு அவள் விழிகளில் ஒரு பழரசம் அதை காண்பதில் எந்தன் பரவசம் ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம் ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம் சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி தாமாரை பூமீது விழுந்தனவோ இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துகிறு கால்கள் முளைத்ததென்று நடைபோட்டாள் ஜாதி எனும் மழையினிலே ரதி இவள் நனைந்திடேவே அதில் பரதம் தான் துளிர் விட்டு பூப்போல கூத்தாட மனம் எங்கும் மனம் வீசுது எந்தன் மனம் எங்கும் மனம் வீசுது சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம் அரங்கேற அதுதானே உன் கன்னம் மேகத்தை மனதிட வானத்தில் சுயம்வரம் நடத்திடும் வானவில் உன் வண்ணம் இடையின் பின்னழகில் இரண்டு குடத்தை கொண்ட புதிய தம்புராவை மீட்டி ...