நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

படம்: நெஞ்சில் ஒரு ஆலயம்
உணர்வு: தவிப்பு
ஆக்கம்: கண்ணதாசன்
பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை


நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது
ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

Comments

  1. Thank you so much sir.... Wonderful song......

    ReplyDelete
    Replies
    1. Could anyone says what is the ragam name for this song

      Delete
  2. Thank You Sir
    தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

    ReplyDelete
  3. மனிதரின் வாழ்க்கையை மொத்தமாக இந்த ஒரு பாடலில் சொல்லிவிட்டார்
    புரிந்தவர்கள் நிச்சயம் உணர்வார்கள்

    ReplyDelete
  4. A very beautiful and meaning filled song giving in a nutshell the philosophy of life. Everyone must meditate and take lessons for life to enjoy peace and be prepared for any reality of life. Thanks for the composer and publisher.

    ReplyDelete
  5. அருமையான பாடல்

    ReplyDelete
  6. மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும் - in life

    ReplyDelete
  7. "எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
    இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
    எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
    இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
    பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும்
    மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்"

    Every time I listen to these lines, I am blown away by how Kannadasan distilled the essence of the unpredictability of life into these six lines. He didn't use big, bombastic words that one would run into only in poetry; these are everyday words. And those simple words add up to one complex meaning!
    Thanks for posting the lyrics in Tamil.

    ReplyDelete
  8. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் துக்கம் ஏதுமில்லை

    ReplyDelete
  9. Nice very meaningful song 🎵 👌 ❤️

    ReplyDelete
  10. My favourite ♥️💖💘

    ReplyDelete
  11. Essarkey: I love this song!
    Jai SriSaiRam 💖

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)