Posts

Showing posts from March, 2013

தினம் தினம் உன் முகம் (Dhinam dhinam un mugam)

படம்:  தங்கைகோர் கீதம் உணர்வு: ஏக்கம் தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம் உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறியாய் யாரென்று நீ உணரும் முதல் கட்டம் மலருன்னை நினைத்து மலர் தினம் வைத்தேன் மலருன்னை நினைத்து மலர் தினம் வைத்தேன் மைவிழி மயக்குதே disco disco disco disco கவிதைகள் வரைந்தேன் அதிலெந்தன் ரசனையை கண்டாயோ கடிதங்கள் போட்டேன் இதயத்தை பதிலாக்கி தருவாயோ முல்லை உன்னை அடைய முயற்சியை தொடர்வேன் மௌனமாகி போனால் மனதினில் அழுவேன் பாவையின் பார்வையே அமுதமாம் தக தக தக தக தம் தேவியின் ஜாடையே தென்றலாம் தக தக தக தக தம் தவம் கூட செய்வேன் தேவதையே நீ கண் திறந்து பாராயோ உயிரையும் விடுவேன் காப்பாற்ற மனமின்றி போவாயோ திறியற்று கருகும் தீபமென ஆனேன் எண்ணையென நினைத்து உன்னை தானே அழைத்தேன் நிலவே நீ வா நீ வா தக தக தக தக தம் நினைவே நீ தான் நீ தான் தக தக தக தக தம் தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம் உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறியாய் யாரென்று நீ உணரும் முதல் கட்டம்

பேசக்கூடாது (Paesa koodathu)

படம்:  அடுத்த வாரிசு பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம் ஏதும் இல்லை வேகம் இல்லை லீலைகள் காண்போமே ஆசை கூடாது மணமாலை தந்து சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே ஆசை கூடாது பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் என் கவிதை நீ பாடும் ராகம் நீ என் நாணம் நீ என் உயிரும் நீ காலம் யாவும் நானுன் சொந்தம் காக்கும் தெய்வம் நீ ஆலிலாடும் மேனியெங்கும் கொஞ்சும் செல்வம் நீ இடையோடு கனியாட தடை போட்டால் நியாயமா உன்னாலே பசி தூக்கம் இல்லை எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை இனிமேலும் ஏனிந்த எல்லை ஆசை கூடாது மணமாலை தந்து சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே பேசக்கூடாது காலை பணியும் நீ கண்மணியும் நீ என் கனவும் நீ மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ என் நினைவும் நீ உஞ்சலாடும் பருவும் உண்டு உரிமை தரவேண்டும் நூலிலாடும் இடையும் உண்டு நாளும் வரவேண்டும் பலகாலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே வருகின்ற தை மாதம் சொந்தம் அணிகின்ற மணிமாலை பந்தம் இரவோடும் பகலோடும் இன்பம் ஆசை கூடாது மணமாலை தந்து சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம் ஏதும் இல்லை வேகம் இல...

சந்தன காற்றே செந்தமிழ் (Santhana Kaatrae)

படம்:  தனிகாட்டு ராஜா சந்தன காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷ பாட்டே வா வா சந்தன காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷ பாட்டே வா வா காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை  நீங்காத ஆசை சந்தன காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷ பாட்டே வா வா காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை  நீங்காத ஆசை நீர் வேண்டும் பூமியில் பாயும் நதியே நீங்காமல் தோள்களில் சாயும் ரதியே பூலோகம் தெய்வீகம் பூலோகம் மறைய மறைய தெய்வீகம் தெளிய தெளிய வைபோகம் தான் பூபாலன் சாய்வதும் கோதை மடியில் பூபாளம் பாய்வதும் பூவை மனதில் பூங்காற்றும் சூடேற்றும் பூங்காற்றும் தவள தவள சூடேற்றும் தழுவ தழுவ ஏகாந்தம் தான் சந்தன காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷ பாட்டே வா வா காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை  நீங்காத ஆசை சந்தன காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷ பாட்டே வா வா

உன்னை நான் பார்த்தது (Unnai naan paarthathu)

படம்:  பட்டிகாட்டு ராஜா உணர்வு: ஏக்கம், உற்சாகம் உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடு தான் உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான் உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடு தான் உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான் நான் உனக்காகவே பாடுவேன் கண் உறங்காமலே பாடுவேன் உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடு தான் உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான் அன்று ஒரு பாதி முகம் தானே கண்டேன் இன்று மறு பாதி எதிர்பார்த்து நின்றேன் அன்று ஒரு பாதி முகம் தானே கண்டேன் இன்று மறு பாதி எதிர்பார்த்து நின்றேன் கைவளையோசை கடல் பொங்கும் அலையோசையோ என செவியார நான் கேட்க வரவில்லையோ உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடு தான் உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான் கம்பன் மகனாக நான் மாற வேண்டும் கன்னி தமிழால் உன் எழில் கூற வேண்டும் என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி என மடிமீது குடியேறி முத்தாடவா உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடு தான் உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான் எங்கு தொட்டாலும் இனிக்கின்ற...

மலர்ந்தும் மலராத (Malarnthum malaraatha)

படம்:  பாசமலர் உணர்வு: பாசம், தாலாட்டு, வேதனை மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழிவண்ணமே வந்து விடிந்து விடியாத காலை பொழுதாக விளைந்த கலை அன்னமே நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழிவண்ணமே வந்து விடிந்து விடியாத காலை பொழுதாக விளைந்த கலை அன்னமே நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே யானை படைகொண்டு சேனை பலவென்று ஆளப்பிறந்தாயடா புவி ஆளப்பிறந்தாயடா அத்தை மகளை மனம் கொண்டு இளமை வழி கண்டு வாழப்பிறந்தாயடா வாழப்பிறந்தாயடா அத்தை மகளை மனம் கொண்டு இளமை வழி கண்டு அத்தை மகளை மனம் கொண்டு இளமை வழி கண்டு வாழப்பிறந்தாயடா வாழப்பிறந்தாயடா தங்க கடியாரம் வைர மணியாரம் தந்து விலை பேசுவார் பொருள் தந்து மனம் பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் ...

நாளை நமதே (Naalai namathae)

படம்:  நாளை நமதே உணர்வு: பாசம் அன்பு மலர்களே நம்பி இருங்களேன் நாளை நமதே இந்த நாளும் நமதே தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே நாளை நமதே இந்த நாளும் நமதே தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும் நமக்கென்ன வளர்ந்து நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே பாசம் எனும் நூல் வழி வந்த பாச மலர் கூட்டம் ஆடும் அழகில் அமைந்தது தானே வாழ்க்கை பூந்தோட்டம் பாசம் எனும் நூல் வழி வந்த பாச மலர் கூட்டம் ஆடும் அழகில் அமைந்தது தானே வாழ்க்கை பூந்தோட்டம் மூன்று தமிழும் ஓரினம் என்று பாட வேண்டும் காவிய சிந்து மூன்று தமிழும் ஓரினம் என்று பாட வேண்டும் காவிய சிந்து அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது நாளை நமதே நாளை நமதே வீடு என்னும் கோவிலில் வைத்த வெள்ளி தீபங்களே நல்ல குடும்பம் ஒளிமயமாக வெளிச்சம் தாருங்களேன் நாடும் வீடும் உங்களை நம்பி நீங்கள் தானே அண்ணன் தம்பி எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது நாளை நமதே நாளை நமதே தாய் வழி வ...

கடவுள் வாழும் கோவிலிலே (Kadavul vaazhum kovililae)

படம்:  ஒரு தலை ராகம் உணர்வு: வேதனை கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் கலையிழந்த மாடத்திலே முஹாரி ராகம் முஹாரி ராகம் முஹாரி ராகம் கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் கலையிழந்த மாடத்திலே முஹாரி ராகம் முஹாரி ராகம் கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் முந்தானை பார்த்து முந்நூறு எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி முந்தானை பார்த்து முந்நூறு எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி முன்னாடி அறியா பெண்மனதை கேட்டு அன்புண்டு வாழும் காளையர் கோடி ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும் அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும் கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் கலையிழந்த மாடத்திலே முஹாரி ராகம் முஹாரி ராகம் கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் கிணற்றுக்குள் வாழும் தவளையை போலே மனதுக்குள் ஆடும் ஆசைகள் கோடி கிணற்றுக்குள் வாழும் தவளையை போலே மனதுக்குள் ஆடும் ஆசைகள் கோடி கண்கெட்ட சூரிய உதயம் எந்தப்பக்கம் ஆனால் எனகென்ன போடி ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும் அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும் கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் கலையிழந்த மாடத்திலே முஹாரி ராகம் முஹாரி ராக...

என்னை தாலாட்ட வருவாளோ (Ennai thaalatta varuvalo)

படம்: காதலுக்கு மரியாதை உணர்வு: ஏக்கம் ஆக்கம்: பழனி பாரதி என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள் ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்  ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள் இரவும் பகலும் என்னை வாட்டினாள் இதயம் அவள் பெயரில் மாற்றினால் காதல் தீயை வந்து மூட்டினாள்  நான் கேட்கும் பதிலிங்கு வாராதா நான் தூங்க மடியொன்று தாராதா தாகங்கள் தாபங்கள் தீராதா தாளங்கள் ராகங்கள் சேராதா வழியோரம் விழி வைக்கிறேன் எனது இரவு அவள் கூந்தலில் எனது பகல்கள் அவள் பார்வையில் காலம் எல்லாம் அவள் காதலில் கனவு கலையவில்லை கண்களில் இதயம் துடிக்க வில்லை ஆசையில் வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில் கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள் நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள் நாளைக்கு நான் காண வரு...