நாளை நமதே (Naalai namathae)

படம்:  நாளை நமதே
உணர்வு: பாசம்

அன்பு மலர்களே நம்பி இருங்களேன்
நாளை நமதே இந்த நாளும் நமதே
தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே இந்த நாளும் நமதே
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே
காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து
காய் கனியாகும் நமக்கென்ன வளர்ந்து நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே

நாளை நமதே நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே

பாசம் எனும் நூல் வழி வந்த பாச மலர் கூட்டம்
ஆடும் அழகில் அமைந்தது தானே வாழ்க்கை பூந்தோட்டம்
பாசம் எனும் நூல் வழி வந்த பாச மலர் கூட்டம்
ஆடும் அழகில் அமைந்தது தானே வாழ்க்கை பூந்தோட்டம்
மூன்று தமிழும் ஓரினம் என்று பாட வேண்டும் காவிய சிந்து
மூன்று தமிழும் ஓரினம் என்று பாட வேண்டும் காவிய சிந்து
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
நாளை நமதே நாளை நமதே

வீடு என்னும் கோவிலில் வைத்த வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஒளிமயமாக வெளிச்சம் தாருங்களேன்
நாடும் வீடும் உங்களை நம்பி
நீங்கள் தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது
நாளை நமதே நாளை நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே
காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து
காய் கனியாகும் நமக்கென்ன வளர்ந்து நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)