Posts

Showing posts from September, 2011

ஏய் setupa மாத்தி (Setupaa maathi)

படம்: சுந்தர புருஷன் உணர்வு: ஏக்கம் கணேசன் முருகனுமனான் கணேசன் முருகனுமனான் ஏய் setupa மாத்தி getupa மாத்தி அப்பன் வச்ச பேர மாத்தி makeupa மாத்தி mattera மாத்தி mummy வெச்ச பேர மாத்தி பாத்துபுட்டேன் astrology okay தான் numerology superu ஜோடி தான் matteru தூளுதான் ஒன்னும் ஒன்னும் love ரெண்டும் ரெண்டும் love pass ஆனாலும் love fail ஆனாலும் love துடிக்குது heartu வள்ளி  வள்ளி beatu படிக்குது latest பாட்டு STD போட்டு மன்மதன கேட்டு பானம் விட்டேன் உன்னை பார்த்து ஏய் சிவனும் தந்தான் பார்வதிக்கு உடம்பில் பாதியே வள்ளிக்கு என் fullbodya பாக்றதுக்கு மாமா கொஞ்சம் looseu மாதிரி தான் உசுர கொடுப்பான் தூசு மாதிரி தான் அட ShahrukhKhan AamirKhan SalmanKhan JackieChan இவங்கள போல இல்ல நானு அழகிலே கொஞ்சம் கம்மி தான் அன்பிலே நான் mummy தான் காதல் academy தான் பாடும் symphony தான் (setupஅ மாத்தி getupஅ மாத்தி...) sleekஆனா பொண்ணு thousand wattsu கண்ணு உதட்டுல vat69u வந்து விளையாடு காதல் carromboardu பள்...

சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால் (Sithathinaal konda pithathinaal)

படம்: Duet உணர்வு: ஏக்கம் சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால் எனது ரத்தத்தினால் காதல் யுத்தத்தினால் கவிதை எழுதிவைத்தேன் தோழி இரு கண்ணிருந்தால் வாசித்து போடி கண் பார்த்ததும் கெண்டை கால் பார்த்ததும் உன்னை பெண் பார்த்ததும் தள்ளி பின் பார்த்ததும் சுட்டாலும் மறக்காது நெஞ்சம் முற்றும் சொன்னதில்லை தமிழுக்கு பஞ்சம் கண்டிப்பதால் என்னை நிந்திப்பதால் நெஞ்சை தண்டிப்பதால் தலையை துண்டிப்பதால் தீராது என் காதல் என்பேன் நீ தீயள்ளி தின்னச்சொல் தின்பேன் உண்டென்று சொல் இல்லை நில்லென்று சொல் இல்லை வாவென்று சொல் இல்லை போவென்று கொல் இம்மென்றால் உள்ளதடி சொர்க்கம் நீயில்லை என்றால் இடுகாடு பக்கம்

கவிதைக்கு பொருள் தந்த (Kavithaikku porul thantha)

படம்: Duet உணர்வு: ஏக்கம் கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா பேச்சுக்கு உயிர் தந்த சப்தங்கள் நீயா என்னை பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா எனை சாகாமல் செய்கின்ற சஞ்சீவி நீயா பருவத்தின் தோட்டத்தில் முதற்பூவும் நீயா என் பாலைவனம் காண்கின்ற முதர்மழையும் நீயா இரவோடு நான் காணும் ஒளிவட்டம் நீதான் என் இருகண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான் வார்த்தைக்குள் உண்டாடும் உள்ளர்த்தம் நீதான் என் வாத்தியத்தின் இசையாக உயிர் மூச்சும் நீதான் தூரத்தில் மயிலிறகால் தொட்டவளும் நீதான் என் பக்கத்தில் அக்கினியாய் சுட்டவளும் நீதான் காதலுக்கு கண்திறந்து வைத்தவளும் நீதான் நான் காதலித்தால் கண்மூடி கொண்டவளும் நீதான்

Oh uncle oh uncle oh

படம்: மின்சார கண்ணா உணர்வு: தன்னம்பிக்கை Oh uncle oh uncle oh uncle aunty oh aunty oh aunty oh aunty uncle Oh uncle oh uncle oh uncle aunty oh aunty oh aunty oh aunty uncle Oh uncle aunty நான் உங்கள் வீட்டு பிள்ளையே எந்த கவலையும் எனக்கிங்கு இல்லையே Oh uncle aunty நான் உங்கள் வீட்டு பிள்ளையே எந்த கவலையும் எனக்கிங்கு இல்லையே மலரின் உழைப்புகள் கனியாகும் மழையின் உழைப்புகள் நதியாகும் மூங்கில் உழைப்புகள் குழலாகும் மனிதன் உழைப்புகள் பணமாகும் Oh uncle oh uncle..... மதங்கள் சண்டையிடும் உலகத்தை திருத்தி அமைதி சொல்ல வேண்டும் மலர்கள் எடுத்து நாம் ஆயுதம் அழித்து அன்பை சொல்ல வேண்டும் அறிவாலே உந்தன் அறிவாலே பூமி உன்வசம் ஆக்கிவிடலாம் முடியாது என்று கிடையாது நீ முயன்றால் வெற்றி கொள்ளலாம் மண்ணும் விண்ணும் தூரம் இல்லை தொட்டுக்கொள்ள பாலம் உண்டு தண்ணீரிலும் வானம் தோன்றுமே Oh uncle oh uncle..... நாளைக்கு என்னும் சொல்லை நீ தள்ளி போடு இன்றைக்கே முடித்துவிடு விளக்கின் அடியிலும் இருட்டுகள் இருக்கு வெளிச்சம் தேடி எடு அருவியிடம் மலைய...

சிட்டு சிட்டு குருவிக்கு (Chittu chittu kuruvikku)

படம்: உள்ள்ளத்தை அள்ளித்தா சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள வானம் இருக்கு இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சை மோதுதம்மா மூஞ்ச பார்த்தே கண்டு பிடிச்சேன் நீங்க மொச பிடிச்ச நாய் தான் மாப்ளேய் நன்றி எல்லாம் நாயப்போல தான் ஆனா வாலு மட்டும் இல்ல மாம்மோய் தொட்டவுடன் சினுங்கிடும் செடி ஒன்னு இருக்கு தொட்டவுடன் மொட்டுவிடும் கொடி என்ன சொல்லவா கொடி என்ன சொல்லவா மின்னலுக்கு வெட்கம் வர மண்ணில் வந்து நடக்கும் கன்னிமகள் சின்ன இடை கொடி என்று சொல்லவா கொடி என்று சொல்லவா சிக்கி முக்கி கல்லப்போல பத்திகிச்சு நெருப்பு நெஞ்சுக்குள்ள ரெண்டு மடங்கு துடிப்பு நான் பச்சை வாழையா முத்தம் சிந்தி என்னை அழைக்கும் நீ சாரல் மழையா சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சை மோதுதம்மா தங்கமான குணத்தக்கண்டு ஒரு தங்கமான பொண்ணு புடிச்சேன் மாப்ளேய் தண்ணிக்குள்ள நெய்யேடுப்பேன் நான் அந்த தந்திரத்த சொல்ல மாட்டேன் மாம்ம...

சந்தா ஓ சந்தா (Chanda O Chanda)

படம்: கண்ணதிரே தோன்றினாள் உணர்வு: ஏக்கம் பாடியவர்: ஹரிணி சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தா உள்ளுக்குள் காதல் கொடி வளர்த்தாள் முத்துக்கள் முட்ட கண்டு துடித்தாய் முத்துக்கு மூடி இட்டு மறைத்தாய் இனிமேலும் திரை போட வழி இல்லையே உன்  காதல் பிழை இல்லையே சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தா ஆணின் இனம் அது கிளை மாதிரி பெண்ணின் இனம் அது வேர் மாதிரி கிளை பேசினால் அதை ஊர் கேட்குமே வேர் பேசினால் அதை யார் கேட்பது இன்று நானே வெட்க திரை கிழித்தேன் என்னை நானே யுத்தம் செய்து ஜெயித்தேன் விதை தாண்டி வந்த இலைகள் விதைக்குள் மீண்டும் போகாது சுற்றம் மீறி வந்த காதல் சுட்டால் கூட வேகாது உன் கண் விழிக்குள் குடியிருந்தால் காற்றும் வெயிலும் தாக்காது சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தா ஒரு பூவிலும் மனம் பார்க்காதவள் உண் வேர்வையில் புது மனம் பார்கிறேன் குயில் பாடலில் மனம் மசியாதவள் இரயில் ஓசையில் இன்று இசை கேட்கிறேன் எல்லாம் இந்த காதல் செய்த மாயம் என்னை போல வெண்ணிலவும் தேயும் பாவை உன்னை கேட்க நினைத்த பரிசு ஒன்று அறிவாயா உன்னக்குள் சென்ற காற்று வே...

மனிதா மனிதா (Manitha manitha)

படம்: கண் சிவந்தால் மண் சிவக்கும் உணர்வு: ரௌத்திரம் மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும் விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும் அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும் மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும் சில ஆறுகள் மீறுதடா வரலாறுகள் மாறுதடா பசியால் பல ஏழைகள் சாவதென்பது தேசியமானதடா இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசியமானதடா அட சாட்டைகளே இனி தீர்வுகள் என்பது சூசகமானதடா (மனிதா மனிதா இனி.......) மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும் ஒளி வீசுக சூரியனே யுகம் மாறுது வாலிபனே ஒரு தோல்வியிலா புது வேள்வியினால் இனி சோதனை தீர்ந்து விடும் சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றி விடும் அட சாமரம் வீசிய பாமர ஜாதிகள் சாதனை கண்டு விடும் (மனிதா மனிதா இனி.......)

மேற்கே விதைத்த சூரியனே (Merkae vithatha suriyanae)

படம்: Citizen உணர்வு: ரௌத்திரம் மேற்கே விதைத்த சூரியனே உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம் தோன்றிட ஏதும் தடை இருந்தால் உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம் இடர் நீங்கவே அந்த இருள் போகவே கையில் ஒளிசாட்டை எடுத்தாலென்ன விஸ்வரூபம் கொண்டு விண்ணை இடிப்போம் நண்பா சில விண்மீன்கள் விழுந்தாலென்ன மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை கைவாளாய் எடுத்து இன்னல் தீர தீர போராட்டம் நடத்து (மேற்கே விதைத்த சூரியனே உன்னை.....) கூட்டுப்புழு கட்டிக்கொண்ட கூடு கல்லறைகள் அல்ல சில பொழுது போனால் சிறகு வரும் மெல்ல ரெக்க்ககட்டி ரெக்க்ககட்டி வாடா வானம் உண்டு வெல்ல வண்ண சிறகின் முன்னே வானம் பெரிதல்ல இதயம் துணிந்து எழுந்த பின்னாலே இமயமலை உந்தன் இடுப்புக்கு கீழே நரம்புகள் வரம்புகள் மீறி துடிக்கட்டும் விரல்களில் எரிமலை ஒன்று வெடிக்கட்டும் முட்டுங்கள் திறக்கும் என்று புது BIBLE கேட்கட்டும் (மேற்கே விதைத்த சூரியனே உன்னை.....) சின்ன சின்ன தீக்குச்சிகள் சேர்ப்போம் தீ வளர்த்து பார்போம் விடியல் வரும் முன்னே இருள் எரித்து கொல்வோம் குட்டுப்பட்ட குட்டுப்பட்ட கூட்டம் குனிந்த...

குக்கூ கூகூ கூவும் குயிலக்கா (Cuckoo koo koovum kuyilakka)

படம்: வள்ளி உணர்வு: உற்சாகம் குக்கூ கூகூ கூவும் குயிலக்கா தித்தி தை தை ஆடும் மயிலக்கா மாமலையோரம் அருவிகள் நாட்டியமாடும் இது போலே நில்வாயே கூகூ குக்கூ கூகூ கூவும் குயிலக்கா ஓங்கி நிற்கும் வானையே தாங்கி நிற்கும் மூங்கிலே பூங்குழலை ஊதினாய் ராகம் என்ன பாடினாய் ஆற்றங்கரை மேட்டிலே தென்றல் சொல்லும் பாட்டிலே தென்பொதிகை காட்டிலே தேனிறைக்கும் பூக்களே இயற்கையில் ஏதோ ஏதோ அதிசயம் அம்மம்மா அடித்தது யாரோ யாரோ எனக்கதை சொல்லம்மா ரிககரிஸ ரிககரிஸ நிதப்ப்பா நிதப்ப்பா நிதப்ப்பா (குக்கூ கூகூ கூவும் குயிலக்கா....) மாமன் அல்ல மாமி நீ மையல் தரும் ரூபினி நாட்டியத்தில் பத்மினி ஆடி கொஞ்சம் காமினி முன்னழகு மோகினி முத்தம் ஒன்னு தாடிநீ வஞ்சி உந்தன் தாவணி நெஞ்சில் இல்லை பாருநீ இடுப்புக்கு மேலே மேலே ஏஹே பறக்குது பாவாடை ஓஹோஹோ அடிக்கடி கீழே கீழே ஏஹே நழுவுது மேலாடை ஓஹோஹோ ரிககரிஸ ரிககரிஸ நிதப்ப்பா நிதப்ப்பா நிதப்ப்பா (குக்கூ கூகூ கூவும் குயிலக்கா....)

இது சங்கீத திருநாளோ (Ithu sangeetha thirunaalo)

படம்: காதலுக்கு மரியாதை உணர்வு: பாசம் இது சங்கீத திருநாளோ புது சந்தோசம் தரும் நாளோ ரதி நம் வீட்டில் பிறந்தாளோ சிறு பூவாக மலர்ந்தாளோ சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள் முத்த மழை கன்னம் விழ நனைந்தாளே கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தாளே  (இது சங்கீத திருநாளோ.....) கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள் கண்களை பின்புறம் வந்து மூடுவாள் செல்லம் கொஞ்சி தமிழ் பாடுவாள் தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள் உறங்கும் பொழுதும் என்னை தேடுவாள் அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள் பூவெல்லாம் இவள் போல அழகில்லை பூங்காற்று இவள் போல சுகம் இல்லை இது போல சொந்தங்கள் இனி இல்லை எப்போதும் அன்புக்கு அழிவில்லை இவள் தானே நம் தேவதை இது சங்கீத திருநாளோ புது சந்தோசம் தரும் நாளோ ரதி நம் வீட்டில் பிறந்தாளோ சிறு பூவாக மலர்ந்தாளோ நடக்கும் நடையில் ஒரு தேர்வலம் சிரிக்கும் அழகு ஒரு கீர்த்தனம் கண்ணில் மின்னும் ஒரு காவியம் மனதில் வரைந்து வைத்த ஓவியம் நினைவில் நனைந்து நிற்கும் பூவனம் என்றும் எங்கும் இவள் ஞாபகம் இவள் போகும் வழி எங்கும் பூவாவேன் இரு பக்கம் காக்...