மனிதா மனிதா (Manitha manitha)
படம்: கண் சிவந்தால் மண் சிவக்கும்
உணர்வு: ரௌத்திரம்
மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்
மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
சில ஆறுகள் மீறுதடா வரலாறுகள் மாறுதடா
பசியால் பல ஏழைகள் சாவதென்பது தேசியமானதடா
இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசியமானதடா
அட சாட்டைகளே இனி தீர்வுகள் என்பது சூசகமானதடா
(மனிதா மனிதா இனி.......)
மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
ஒளி வீசுக சூரியனே யுகம் மாறுது வாலிபனே
ஒரு தோல்வியிலா புது வேள்வியினால் இனி சோதனை தீர்ந்து விடும்
சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றி விடும்
அட சாமரம் வீசிய பாமர ஜாதிகள் சாதனை கண்டு விடும்
(மனிதா மனிதா இனி.......)
ஒளி வீசுக சூரியனே யுகம் மாறுது வாலிபனே
ஒரு தோல்வியிலா புது வேள்வியினால் இனி சோதனை தீர்ந்து விடும்
சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றி விடும்
அட சாமரம் வீசிய பாமர ஜாதிகள் சாதனை கண்டு விடும்
(மனிதா மனிதா இனி.......)
அருமையான பாடல்
ReplyDeleteThanks for the lyrics. Some corrections to update. Only lines that needs correction is given
ReplyDeleteசில ஆறுகள் மீறுதடா வரலாறுகள் மாறுதடா
இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசியமானதடா
அட சாட்டைகளே இனி தீர்வுகள் என்பது சூசகமானதடா
Thanks a lot Saran. I have fixed the errors.
Delete