கடவுள் வாழும் கோவிலிலே (Kadavul vaazhum kovililae)

படம்:  ஒரு தலை ராகம்
உணர்வு: வேதனை

கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்
கலையிழந்த மாடத்திலே முஹாரி ராகம்
முஹாரி ராகம் முஹாரி ராகம்

கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்
கலையிழந்த மாடத்திலே முஹாரி ராகம் முஹாரி ராகம்
கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்

முந்தானை பார்த்து முந்நூறு எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி
முந்தானை பார்த்து முந்நூறு எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி
முன்னாடி அறியா பெண்மனதை கேட்டு அன்புண்டு வாழும் காளையர் கோடி
ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும்
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்

கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்
கலையிழந்த மாடத்திலே முஹாரி ராகம் முஹாரி ராகம்
கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்

கிணற்றுக்குள் வாழும் தவளையை போலே மனதுக்குள் ஆடும் ஆசைகள் கோடி
கிணற்றுக்குள் வாழும் தவளையை போலே மனதுக்குள் ஆடும் ஆசைகள் கோடி
கண்கெட்ட சூரிய உதயம் எந்தப்பக்கம் ஆனால் எனகென்ன போடி
ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும்
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்

கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்
கலையிழந்த மாடத்திலே முஹாரி ராகம்
முஹாரி ராகம் முஹாரி ராகம்

Comments

  1. பாலா பாலகிருஷ்ணன் பாடல அருமையான பாடல் நானும் பாடுவேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)