அன்பென்ற மழையிலே அகிலங்கள் (Anbendra mazhaiyilae)
படம்: மின்சார கனவு உணர்வு: தெய்வீகம் ஆக்கம்: வைரமுத்து பாடியவர்: அனுராதா Sriram அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன்மின்னினானே விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ் மைந்தன் தோன்றினானே கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ் மைந்தன் தோன்றினானே புகழ் மைந்தன் தோன்றினானே கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்குமோ கருணை மகன் தோன்றினானே நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாக தோன்றினானே இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானே அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன்மின்னினானே வந்தவன் மின்னினானே அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன்மின்னின...