ஒன்று எங்கள் ஜாதியே (Onru engal jaathiyae)
படம்: பணக்கார குடும்பம்
உணர்வு: எழுச்சி
ஆக்கம்: கண்ணதாசன்
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும்
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
உணர்வு: எழுச்சி
ஆக்கம்: கண்ணதாசன்
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும்
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணிலிருந்து பொன்னை தேடினான்
ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணிலிருந்து பொன்னை தேடினான்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான் ஆஹா
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான் ம்ஹும்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆள போகிறான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆள போகிறான்
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணுகின்றது எங்கள் நெஞ்சமே
எங்களாட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணுகின்றது எங்கள் நெஞ்சமே
எங்களாட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணுகின்றது எங்கள் நெஞ்சமே
எங்களாட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணுகின்றது எங்கள் நெஞ்சமே
எங்களாட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித்தந்து எங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைத்தது எங்கள் நெஞ்சமே
கல்லில் வீடு கட்டித்தந்து எங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைத்தது எங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
ஆ....
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
Comments
Post a Comment