நான் உங்கள் வீட்டு பிள்ளை (Naan ungal veetu pillai)


படம்: புதிய பூமி
உணர்வு: எழுச்சி
ஆக்கம்: பூவை செங்குட்டுவன்

நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை
நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை

நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை

காலம் தோறும் பாடம் கூறும் மாறுதல் இங்கே தேவை
ஏழை எளியோர் துயரம் போக்கும் செயலே எந்தன் சேவை
காலம் தோறும் பாடம் கூறும் மாறுதல் இங்கே தேவை
ஏழை எளியோர் துயரம் போக்கும் செயலே எந்தன் சேவை
இதயம் என்பது ரோஜாவானால் நினைவை நறுமணம் ஆகும்
இதயம் என்பது ரோஜாவானால் நினைவை நறுமணம் ஆகும்
எங்கே இதயம் வாழும் அன்பே என்னை ஆளும்

நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை

கோவிலென்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே
உள்ளமென்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே
கோவிலென்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே
உள்ளமென்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே
பிறந்த நாடே சிறந்த கோவில் பேசும் மொழியே தெய்வம்
இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால் கோபுரமாகும் கொள்கை

நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை

உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும் உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும் உலகம் செழிப்பதுண்டு
உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும் நிச்சயம் உலகில் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும் உலகம் செழிப்பதுண்டு
எதுவந்தாலும் ஏற்றுக்கொண்டால் துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி

நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை

Comments

  1. இந்த பாடலை எழுதியவர் கவிஞர் பூவை. செங்குட்டுவன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த பாட்டு என் தலைவனை தவிர வேற எந்த நடிகரை நடிச்சிருந்தாலும் செட் ஆக இருக்காது

      Delete
  2. இந்த பாடலை எழுதியவர் கவிஞர் பூவை. செங்குட்டுவன்.

    ReplyDelete
    Replies
    1. பூவை.செங்குட்டுவன் என்பதே சரி.

      Delete
  3. சூப்பர்.... காலத்தால் அழியாத பாடல்

    ReplyDelete
  4. உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும் நிச்சயம் உலகில் உண்டு

    There is a mistake here. It should be
    உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும் உலகில் நிச்சயம் உண்டு

    ReplyDelete
  5. அருமையான பாடல். கவிஞர் பூவை .செங்குட்டுவன் அவர்கள் எழுதிய பாடல். எளிமையான மனிதர். காலம் உள்ளவரை அவரது புகழும் நிலைத்து நிற்கும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)