உன்னை காணாத (Unnai kaanatha)

படம்: இதய கமலம்
உணர்வு: பாசம்



உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல

இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல

ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலுமில்லை
ஒரு கோவிலில்லாமல் தீபமுமில்லை
ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலுமில்லை
ஒரு கோவிலில்லாமல் தீபமுமில்லை
நீயெந்தன் கோவில் நான் அங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல

உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல

என்மேனியில் உன்னை பிள்ளையை போலே
நான் வாரி அணைப்பேன் ஆசையினாலே
என்மேனியில் உன்னை பிள்ளையை போலே
நான் வாரி அணைப்பேன் ஆசையினாலே
நீ தருவாயோ நான் தருவேனோ
யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல

உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)