கடவுள் ஒரு நாள் உலகை (Kadavul oru naal ulagai)
படம்: சாந்தி நிலையம்
ஆக்கம்: கவிஞர் கண்ணதாசன்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்
கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்
ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்
கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் யார் தந்தது
கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் யார் தந்தது
எல்லையில்லா நேரம் நிலமும் நான் தந்தது
எங்கும் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது
இறைவனுக்கே இது புரியவில்லை
மனிதரின் கொள்கை தெரியவில்லை
ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்
பள்ளிக்கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றானாம்
பச்சை பிள்ளை மழலை மொழியில் தன்னை கண்டானாம்
பள்ளிக்கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றானாம்
பச்சை குழந்தை சிரிப்பில் தன்னை கண்டானாம்
உள்ளம் எங்கும் செல்லம் பொங்கும் அன்பை கண்டானாம்
உண்மை கண்டேன் போதும் என்று வானம் சென்றானாம்
கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்
Thanks. I share with my kid
ReplyDeleteThat's great
Delete