Posts

Showing posts from October, 2011

நறுமுகையே நறுமுகையே (narumugaye narumugaye)

படம்: இருவர் ஆக்கம்: வைரமுத்து நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய் செங்கனி ஊறிய வாய்திறந்து நீயொரு திருமொழி சொல்லாய் அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய கொற்றபொய்கை ஆடியவள் நீயா திருமகனே திருமகனே நீயொரு நாழிகை பாராய் செந்நிற புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய் அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா மங்கை மான்விழி அம்புகள் என் மார் துளைத்ததென்ன மங்கை மான்விழி அம்புகள் என் மார் துளைத்ததென்ன பாண்டினாடனை கண்டு என்னுடல் பசலை கொண்டதென்ன நிலவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் நிலவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை இடையில் மேகலை இருக்கவில்லை நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய் செங்கனி ஊறிய வாய்திறந்து நீயொரு திருமொழி சொல்லாய் அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய கொற்றபொய்கை ஆடியவள் நீயா யாயும் யாயும் யாராகியரோ நெஞ்சு நீண்டதென்ன யாயும் யா...

காதல் கடிதம் தீட்டவே (kaathal kaditham theetavae)

படம்: ஜோடி ஆக்கம்: வைரமுத்து காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும் சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள் இரவுபகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னை சேர்ந்திடும் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும் சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள் இரவுபகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னை சேர்ந்திடும் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும் கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன் பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ பொண்ணே உன் கடிதத்தை பூவாலே திறக்கின்றேன் விரல்பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ அன்பே உந்தன் அன்பில் ஆடிபோகின்றேன் செம்பூக்கள் தீண்டும் போது செத்து செத்து பூ பூக்கிறேன் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும் கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா மஞ்சத்தில் உறங்கும் போதும் சினுங்கமாட்டேனா காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய் கண்ணே நான் உறங்கும் போதும் உற...

தொடு தொடுவெனவே (Thodu thoduvenavae)

படம்: துள்ளாத மனமும் துள்ளும் ஆக்கம்: வைரமுத்து தொடு தொடுவெனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம் விடு விடுவெனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும் மன்னவா ஒரு கோயில் போல் இந்த மாளிகை எதற்காக தேவியே என் ஜீவனே இந்த ஆலயம் உனக்காக வானில் ஒரு புயல் மழை வந்தால் அன்பே எனை எங்கனம் காப்பாய் கண்ணே உன்னை என்கண்ணில் வைத்து இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன் சாத்தியமாகுமா நான் சத்தியம் செய்யவா இந்த பூமியே திர்ந்துபோய்விடில் என்னை எங்கு சேர்ப்பாய் நட்சத்திரங்களை தூசு தட்டி நான் நல்ல வீடு செய்வேன் நட்சத்திரங்களின் சூட்டில் நான் உருகி போய்விடில் என் செய்வாய் உருகிய துளிகளை ஒன்றாக்கி என்னுயிர் தந்தே உயிர் தருவேன் ஏ ராஜா இது மெய் தானா ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில் முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை நான் நம்புகிறேன் உன்னை தொடு தொடுவெனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம் விடு விடுவெனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும் நீச்சல் குளமிருக்கு நீரும் இல்லை எதில் எங்கு நீச்சல் அடிக்க அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும் இந்த அல்லிராணி குளிக்க இந்த ரீதியில் ...

இரவு பகலை தேட (iravu pagalai thaeda)

படம்: கண்ணுக்குள் நிலவு உணர்வு: ஏக்கம் இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதை கொஞ்சம் சுமக்குமோ விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம் எந்தன் கனவை சொல்லி அழைக்கும்மோ அச்சச்சோ ஓ அச்சச்சோ இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட வாழ்க்கை என்னும் பயணம் இங்கே தூரம் தூரம் எங்கே மாறும் எங்கே சேரும் சொல்லும் காலம் தென்றல் வந்து பூக்கள் ஆடும் அது ஒரு காலம் மண்ணில் சிந்தி பூக்கள் வாடும் இலையுதிர் காலம் கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும் தனியாக அழகில்லையே கடலை சேரா நதியைக்கண்டால் தரையில் ஆடும் மீனை கண்டால் ஒற்றை குயிலின் சோகம் கண்டால் அச்சச்சோ இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட வீசும் காற்று ஓய்வை தேடி எங்கே போகும் பூக்கள் பேச வாயிருந்தால் என்ன பேசும் மாலை நேரம் பறவை கூட்டம் கூட்டை தேடும் பறவை போனால் பறவை கூடு யாரை தேடும் நாடோடி மேகம் ஓடோடி ...

ரோஜா பூந்தோட்டம் (Roja poonthotam)

படம்: கண்ணுக்குள் நிலவு ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம் ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே நம் காதல் கதையை கொஞ்சம் சொல் சொல் என்றதே ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம் விழியசைவில் உன் இதழசைவில் இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி புதிய இசை ஒரு புதிய திசை புது இதயம் இன்று உன் காதலில் கிடைத்ததடி காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய் காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய் நீ நெருங்கினால் நெருங்கினால் இளமை சுடுகிறதே ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம் உன்னை நினைத்து நான் விழித்திருந்தேன் இரவுகளில் தினம் வண்ண நிலவுக்கு துணை இருந்தேன் நிலவடிக்கும் கொஞ்சம் வெயிலடிக்கும் பருவநிலை அதில் என் மலருடல் சிலிர்த்திருந்தேன் சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறுகண்ணில் சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறுகண்ணில் என் இரவையும் பகலையும் உனது விழியில் கண்டேன் ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லா...

இருபது கோடி நிலவுகள் (irubathu kodi nilavugal)

படம்: துள்ளாத மனமும் துள்ளும் ஆக்கம்: வைரமுத்து இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ என் எதிரே வந்து புன்னகை செய்ய கண்ணும் கூசுதோ இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ என் எதிரே வந்து புன்னகை செய்ய கண்ணும் கூசுதோ குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ நெளிகின்ற வில்ரெண்டு புருவங்கள் ஆகாதோ நூறுகோடி பெண்கள் உண்டு உன்போல் யாரும் இல்லையே ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ என் எதிரே வந்து புன்னகை செய்ய கண்ணும் கூசுதோ தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன வனிதை உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ தேன் மிதக்கும் உதடு சேர்ந்து நிற்பதென்ன ஒன்றை ஒன்று முத்தம் இட்டு இன்பம் கொள்ளவோ மானிட பிறவி என்னடி மதிப்பு உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு நூறுகோடி பெண்கள் உண்டு உன்போல் யாரும் இல்லையே ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ என் எதிரே வந்து புன்னகை செய்ய கண்ணும் கூசுதோ July  மாதம் பூக்கும் கொன்றை பூக்கள் போல ...

ராகங்கள் பதினாறு (Raagangal pathinaaru)

படம்: தில்லு முல்லு ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா பலநூறு ராகங்கள் இருந்தாலென பதினாறு பாட சுகமானது கலைமாது தான் மீட்டும் இதமான வீணை கனிவான ஸ்வரம் பாட பதமானது அழகான இளம்பெண்ணின் மேனி தான் கூட ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா அழகான இளம்பெண்ணின் மேனி தான் கூட ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா பலநூறு ராகங்கள் இருந்தாலென பதினாறு பாட சுகமானது இடையாட வளையாட சலங்கைகள் ஆட இலையோடு கொடி போல நடமாடினாள் உலகாளும் உமையாளின் ராக பாவங்கள் ஆனந்தம் குடி கொண்ட கோலம்மம்மா  உலகாளும் உமையாளின் ராக பாவங்கள் ஆனந்தம் குடி கொண்ட கோலம்மம்மா ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா பலநூறு ராகங்கள் இருந்தாலென பதினாறு பாட சுகமானது

உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் (Unna nenaichaen paattu padichaen)

படம்: அபூர்வ சகோதரர்கள் உணர்வு: ஏக்கம் உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும் அந்த வானம் போல் சிலபேர் வாழ்க்கையும் இருக்கும் உணர்ந்தேன் நான் உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம் மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேண்டும் கொட்டும் மழை காலம் உப்பு விற்க போனேன் காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன் தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே பட்டபிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞான தங்கமே நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு நான் தான் உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே கண்ணிரண்டில் நான் தான் காதெலெனும் கோட்டை கட்டி வைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும் நட்டவிதை யாவும் நல்ல மரமாகும் ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞான தங்கமே ஆட்டம் ...

ஒரு பொன்மானை (oru ponmaanai)

படம்: மைதிலி என்னை காதலி ஆக்கம்: டி. ராஜேந்தர் உணர்வு: வியப்பு ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம் ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம் சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு அவள் விழிகளில் ஒரு பழரசம் அதை காண்பதில் எந்தன் பரவசம் ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம் ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம் சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி தாமாரை பூமீது விழுந்தனவோ இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துகிறு கால்கள் முளைத்ததென்று நடைபோட்டாள் ஜாதி எனும் மழையினிலே ரதி இவள் நனைந்திடேவே அதில் பரதம் தான் துளிர் விட்டு பூப்போல கூத்தாட மனம் எங்கும் மனம் வீசுது எந்தன் மனம் எங்கும் மனம் வீசுது சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம் அரங்கேற அதுதானே உன் கன்னம் மேகத்தை மனதிட வானத்தில் சுயம்வரம் நடத்திடும் வானவில் உன் வண்ணம் இடையின் பின்னழகில் இரண்டு குடத்தை கொண்ட புதிய தம்புராவை மீட்டி ...

நிலவே முகம் காட்டு (nilave mugam kaattu)

படம்: ஏஜமான் ஆக்கம்: வாலி உணர்வு: ஏக்கம் நிலவே முகம் காட்டு என்னை பார்த்து ஒளிவீசு அலை போல் சுருதி மீட்டு இனிதான மொழி பேசு அணைத்தேன் உனையே இது தாய்மடியே பனிபோல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா இனிதான தென்றன் உன்னையே ஒரு குறை சொல்லலாமா காலம் மாறும் கலக்கம் ஏனம்மா இரவில்லாமல் பகலும் ஏதம்மா நான் உன் பிள்ளைதானம்மா நானும் கண்ட கனவு நூறைய்யா எனது தாயும் நீங்கள் தானைய்யா இனி உன் துணை நானைய்யா எனை சேர்ந்தது கொடி முல்லையே இது போல துணையும் இல்லையே இனி நீயென் தோளில் பிள்ளையே நிலவே முகம் காட்டு என்னை பார்த்து ஒளிவீசு அலை போல் சுருதி மீட்டு இனிதான மொழி பேசு அணைத்தேன் உனையே இது தாய்மடியே சுமை போட்டு பேசும் ஊரென்றால் மனம் தவித்திடும் மானே இமை மீறும் கண்ணின் நீரென்றால் தினம் கொதிப்பவன் நானே மாலையோடு நடக்கும் தேரையா  நடக்கும் பொது வணங்கும் ஊரைய்யா உன்னை மீற யாரைய்யா மாமன் தோளில் சாய்ந்த முல்லையே மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே நீயென் வாழ்வின் எல்லையே இதை மீறிய தவம் இல்லையே இனி எந்த குறையும் இல்லையே தினம் தீரும் தீரும் தொல்லையே ந...

வெற்றிக்கொடி கட்டு (vetri kodi kattu)

படம்: படையப்பா ஆக்கம்: வைரமுத்து உணர்வு: தன்னம்பிக்கை வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைகல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைகல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா வெற்றிக்கொடி கட்டு மலைகளை முட்டும்வரை முட்டு லட்சியம் எட்டும் வரை எட்டு படைஎடு படையப்பா வெற்றிக்கொடி கட்டு மலைகளை முட்டும்வரை முட்டு லட்சியம் எட்டும் வரை எட்டு படைஎடு படையப்பா கைதட்டும் உளி பட்டு நீவிடும் நெற்றித்துளி பட்டு பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா கைதட்டும் உளி பட்டு நீவிடும் நெற்றித்துளி பட்டு பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா வெட்டுக்கிளியல்ல நீயொரு வெட்டும்புலியென்று பகைவரை வெட்டி தலை கொண்டு நடையெடு படையப்பா வெட்டுக்கிளியல்ல நீயொரு வெட்டும்புலியென்று பகைவரை வெட்டி தலை கொண்டு நடையெடு படையப்பா நிக்க துணிவுண்டு இளைஞர்கள் பக்கத்துணையுண்டு உடன்வர மக்கட்படையுண்டு முடிவெடு படையப்பா வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைகல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைகல்லும் உனக்கொரு படிக்கல்ல...

இளமை ஊரை சுற்றும் ஒருநாள் (illamai oorai sutrum)

படம்: மௌனம் பேசியதே ஆக்கம்: வாலி உணர்வு: தன்னபிக்கை குறிப்பு: இந்த பாடல் திரைபடத்தில் இடம்பெறவில்லை இளமை ஊரை சுற்றும் ஒருநாள் இதுதான் வாலிபத்தின் திருநாள் இளமை ஊரை சுற்றும் ஒருநாள் இதுதான் வாலிபத்தின் திருநாள் கால்கள் இருக்கு அளந்துபார்க்க கைகள் இருக்கு அள்ளிசேர்க்க யாரு இங்கே நம்மை கேட்க வாழ்க்கையை வாழ்ந்தே பார்போம் வா நதிபோலே நடப்போமே அணைகள் போட்டால் உடைப்போமே மலர்போலே சிரிப்போமே மனதை கடலாய் விரிப்போமே இளமை ஊரை சுற்றும் ஒருநாள் இதுதான் வாலிபத்தின் திருநாள் பாதைகள் ஒவ்வொன்றாக பயணம் செய் ஊர் ஊராக உன்னுடன் எங்கேயும் வானம் வரும் துகுதுகுது நட்பெனும் நூலைக்கொண்டு உறவெனும் தறியில் நின்று நீலமிருக்கும் வானத்தை நெஞ்சமிருந்தால் தீண்டலாம் மேகமிருக்கும் இமயத்தை மனதுவைத்தால் தாண்டலாம்   நான் நினைத்தபடி போகும் வாலிபம் நான் சிரித்தபடி வாழும் நாழிது கண்ணில் கண்ணீர் ஏது இளமை ஊரை சுற்றும் ஒருநாள் இதுதான் வாலிபத்தின் திருநாள் அனுபவி யாவும் இன்று நேர் வழி நீயும் சென்று எல்லைகள் கடந்தோடும் காற்றை போல துகுதுகுது யாவர்க்கும் எல்லாம் என்று...

நிலவே நிலவே நிலவே (nilavae nilavae nillu)

படம்: நிலவே வா ஆக்கம்: வைரமுத்து நிலவே நிலவே நிலவே நிலவே நில்லு நில்லு திருவாய் மொழிகள் சொல்லு மலரே மலரே மலரே மலரே சொல்லு சொல்லு மனதை தமிழில் சொல்லு கண்கள் சொல்கின்ற பாஷை எல்லாம் கண்டு தெளிகின்ற ஞானம் இல்லை தங்க செவ்வாயின் தாழ்திறந்து சொல்லு சொல்லு சொல்லு கொடிகொண்ட அரும்பு மலர்வதற்கு கொடியோடு மனுக்கள் கொடுப்பதில்லை பழங்கள் பழுத்தும் பறவைக்கெல்லாம் மரங்கள் தந்தியொன்றும் அடிப்பதில்லை மௌனத்தை போல் பெண்ணின் மனமுரைக்க மனிதரின் பாஷைக்கு வலிமையில்லை மொழியே போ போ போ அழகே வா வா வா மொழியே போ போ போ அழகே வா வா வா ரதியே ரதியே ரதியே காதல் என்னும் கனிவாய் மொழியில் சொன்னால் சொன்னால்  வளரும் பிறையே பிறையே பிறையே வானம் எட்டி தொடவும் முடியும் என்னால் என்னால் வாயில் வரைந்து ஒரு வார்த்தை சொன்னால் காற்றை கடன்வாங்கி பறந்து போவேன் காலவெளியோடு கரைந்து போவேன் சொல்லு சொல்லு சொல்லு வண்டுகள் ஒலிசெய்து கேட்டதுண்டு மலர்கள் சத்தமிட்டு பார்த்ததுண்டா நதிகள் சொற்பொழிவு செய்வதுண்டு கரைகளின் மௌனமென்றும் கலைந்ததுண்டா சொல்கின்ற மொழிகள் தீர்ந்துவிடும் சொல்லா...

சம்சாரம் என்பது வீணை (samsaram enbathu veenai)

படம்: மயங்குகிறாள் ஒரு மாது ஆக்கம்: கண்ணதாசன் சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம் சலனங்கள் அதில் இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம் சலனங்கள் அதில் இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை என் வாழ்க்கை திறந்த ஏடு அது ஆசை கிளியின் கூடு என் வாழ்க்கை திறந்த ஏடு அது  ஆசை  கிளியின் கூடு பல காதல் கவிதை பாடி பரிமாறும் உண்மைகள் கோடி இதுபோன்ற ஜோடியில்லை இதுபோன்ற ஜோடியில்லை மணம் குணம் ஒன்றான முல்லை சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம் சலனங்கள் அதில் இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை என் மாடம் முழுதும் விளக்கு ஒரு நாளும் இல்லை இருட்டு என் மாடம் முழுதும் விளக்கு ஒரு நாளும் இல்லை இருட்டு என் உள்ளம் போட்ட கணக்கு ஒரு போதும் இல்லை வழக்கு இதுபோன்ற ஜோடி இல்லை இதுபோன்ற ஜோடி இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம் சலனங்கள் அதில் இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை தை மாத மேக நடனம் என் தேவி காதல் நளினம் தை மாத மேக நடனம் என் தேவி காதல் நளினம் இந்த காதல் ராணி மன...

கண்ணே கலைமானே (kannae kalaimane)

படம்: மூன்றாம் பிறை ஆக்கம்: கண்ணதாசன் உணர்வு: தாலாட்டு கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உன்னை நானே கண்ணே கலைமானே கன்னி  மயிலென  கண்டேன் உன்னை நானே அந்திப்பகல் உன்னை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் ராரீராரோ உராரீரோ ராரீராரோ உராரீரோ ஊமை என்றால் ஒருவகை அமைதி ஏழை என்றால் அதிலொரு அமைதி நீயோ கிளிபேடு பண்பாடும் ஆனந்த குயில்பேடு ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது கண்ணே கலைமானே கன்னி  மயிலென  கண்டேன் உன்னை நானே அந்திப்பகல் உன்னை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் ராரீராரோ உராரீரோ ராரீராரோ உராரீரோ காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் கண்மணி உன்னை நான் கருத்தினில் நிறைத்தேன் உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே நீயில்லாமல் எது நிம்மதி நீ தானென்றும் என் சந்நிதி கண்ணே கலைமானே கன்னி  மயிலென  கண்டேன் உன்னை நானே அந்திப்பகல் உன்னை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் ராரீராரோ உராரீரோ ராரீராரோ உராரீரோ ராரீராரோ உராரீரோ ராரீராரோ ...

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

Image
உணர்வு: தாலாட்டு ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டிய பின் ஓய்வெடுத்து  தூங்குகின்றான்  ஆராரோ  ஓய்வெடுத்து  தூங்குகின்றான்  ஆராரோ ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ அந்த மந்திரத்தில் அவர் உறங்க  மயக்கத்திலே இவன் உறங்க மண்டலமே உறங்குதம்மா ஆராரோ மண்டலமே உறங்குதம்மா ஆராரோ ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்து கொண்டான் தாலேலோ நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்து கொண்டான் தாலேலோ ...

போகாதே போகாதே நீ (pogathae pogathae nee)

படம்: தீபாவளி ஆக்கம்: நா. முத்துக்குமார் உணர்வு: ஏக்கம் போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன் உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும் கனவே என்னை மூடுதடி யாரென்று நீயும் எனை பார்க்கும் போது உயிரே உயிர் போகுதடி கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்பேனடி போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன் கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும் அதுபோல தானே எந்தன் காதல் எனக்கும் நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அனைப்பதர்க்கு  நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதர்க்கு உனக்காக காத்திருப்பேன் ஓ உயிரோடு பார்த்திருப்பேன் ஓ போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன் அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய் அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய் கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனதுபோல் என் வாழ்வில் வந்தே ஆனாய்  ஏமாற்றம் தாங்கலையே பெண்ணே நீயில்லாமல் பூலோகம் இருட்டிடுதே போக...

மனம் விரும்புதே (manam virumbuthae)

படம்: நேருக்கு நேர் ஆக்கம்: வைரமுத்து உணர்வு: ஏக்கம் மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே நினைத்தாலே சுகம் தானடா நெஞ்சில் உன் முகம் தானடா ஐய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே அடடா நீயொரு பார்வை பார்த்தாய் அழகாய் தானொரு புன்னகை பூத்தாய் அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது, வெட்டியது அதிலே என் மனம் தேயும் முன்னே அன்பே உந்தன் அழகு முகத்தை யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது, ஒட்டியது புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என்னுள்ளம் என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலைமை அது சொல்லும் மனம் ஏங்குதே மனம் ஏங்குதே மீண்டும் காண மனம் ஏங்குதே நினைத்தாலே சுகம் தானடா நெஞ்சில் உன் முகம் தானடா ஐய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா மனம் விரும்புதே மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே மழையோடு நான் கரைந்ததுமில்லை வெயிலோடு நான் உருகியதில்லை பாறைபோல் என்னுள்ளம் இருந்ததடா மலைநாட்டு  கரும்பாறை மேலே தலைகாட்டும் சிறு பூவை போலே பொல்லாத ...

எங்கே எனது கவிதை (Engae enathu kavithai)

படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆக்கம்: வைரமுத்து உணர்வு: ஏக்கம் பிறை வந்துவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்தென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் விம்மும் பிறை வந்துவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்தென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் விம்மும் எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை விழியில் கரைந்து விட்டதோ அம்மம்மா விடியல் அழித்து விட்டதோ அம்மம்மா கவிதை தேடி தாருங்கள் இல்லை என் கனவை மீட்டு தாருங்கள் எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே வெய்யில் தார் ஒழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவி துருவி உன்னை தேடுதே உடையும் நுரைகளில் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன் நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு நூறு முறை பிற...