நிலவே முகம் காட்டு (nilave mugam kaattu)

படம்: ஏஜமான்
ஆக்கம்: வாலி
உணர்வு: ஏக்கம்

நிலவே முகம் காட்டு என்னை பார்த்து ஒளிவீசு
அலை போல் சுருதி மீட்டு இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே இது தாய்மடியே

பனிபோல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா
இனிதான தென்றன் உன்னையே ஒரு குறை சொல்லலாமா
காலம் மாறும் கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும் ஏதம்மா
நான் உன் பிள்ளைதானம்மா
நானும் கண்ட கனவு நூறைய்யா எனது தாயும் நீங்கள் தானைய்யா
இனி உன் துணை நானைய்யா
எனை சேர்ந்தது கொடி முல்லையே
இது போல துணையும் இல்லையே
இனி நீயென் தோளில் பிள்ளையே

நிலவே முகம் காட்டு என்னை பார்த்து ஒளிவீசு
அலை போல் சுருதி மீட்டு இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே இது தாய்மடியே

சுமை போட்டு பேசும் ஊரென்றால் மனம் தவித்திடும் மானே
இமை மீறும் கண்ணின் நீரென்றால் தினம் கொதிப்பவன் நானே
மாலையோடு நடக்கும் தேரையா 
நடக்கும் பொது வணங்கும் ஊரைய்யா
உன்னை மீற யாரைய்யா
மாமன் தோளில் சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே
நீயென் வாழ்வின் எல்லையே
இதை மீறிய தவம் இல்லையே
இனி எந்த குறையும் இல்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே

நிலவே முகம் காட்டு என்னை பார்த்து ஒளிவீசு
அலை போல் சுருதி மீட்டு இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே இது தாய்மடியே

நிலவே முகம் காட்டு என்னை பார்த்து ஒளிவீசு

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)