நம்ம ஊரு சிங்காரி (Namma ooru singaari)

படம்: நினைத்தாலே இனிக்கும்

நம்ம ஊரு சிங்காரி singapore வந்தாளாம்
பொட்டு வச்சு பூமுடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூமுடிச்சு நின்னாளாம்

பாலாடை போலாடும் பாப்பா எப்போதும் நான் சொன்னா கேப்பா
ராஜாவை பார்க்காமல் ரோஜா ஏமாந்து போனாளோ லேசா
நான் நாள வச்சு தேதி வச்சு ஊரு விட்டு ஊரு வந்து நீயின்றி போவேனோ சம்போ
நான் மூணு மெத்தை வீடு கட்டி மாடிமேல உன்னவச்சு பார்க்காமல் போவேனோ சம்போ
மன்மதன் வந்தானா நம்ப சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா நம்ப சங்கதி சொன்னானா

நம்ம ஊரு சிங்காரி singapore வந்தாளாம்
பொட்டு வச்சு பூமுடிச்சு நின்னாளாம்

அன்பான உன் பேச்சு ராகம் நடை போட்டு நீ வந்தால் தாளம்
சுகமான உன் மேனி பாடல் இதிலென்ன இனிமேலும் ஊடல்
அந்த தேவதைக்கு நீயும் சொந்தம் தேவனுக்கு நானும் சொந்தம் பூலோகம் தாங்காது வாம்மா
நம்ம காதலுக்கு ஈடு சொல்ல காவியத்தில் யாருமில்லை நானொன்று நீயொன்று தாம்மா
மன்மதன் வந்தானா நம்ப சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா நம்ப சங்கதி சொன்னானா

நம்ம ஊரு சிங்காரி singapore வந்தாளாம்
பொட்டு வச்சு பூமுடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூமுடிச்சு நின்னாளாம்

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)