காக்கை சிறகினிலே நந்தலாலா (Kakkai siraginilae nandalala)

படம்: ஏழாவது மனிதன்
உணர்வு: வியப்பு
ஆக்கம்: மகாகவி பாரதியார்

காக்கை சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோனுதையே நந்தலாலா

காக்கை சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோனுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா
நின்றன் பச்சைநிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா
நின்றன் பச்சைநிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்க்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா
நின்றன் கீதமிசைக்குதடா நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோனுதையே நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தாய் நந்தலாலா
நின்னை தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா
நந்தலாலா நந்தலாலா

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)