கண்மூடி திறக்கும் போது (Kanmoodi thirakkum)


படம்: Sachien
உணர்வு: வியப்பு

கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே
குடையில்லா நேரம் பார்த்து கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து இது தான் காதல் என்றாளே
தெருமுனையை தாண்டும் வரையில் வெறும் நாள் தான் என்றிருந்தேன்
தேவதையை பார்த்தும் இன்று திருநாள் என்கிறேன்
அழகான விபத்தில் இன்று ஐயோ நான் மாட்டி கொண்டேன்
தப்பிக்க வழிகள் இருந்தும் வேண்டாம் என்றேன்
ஓஓஓஓ ஓஹோ ஓஓஓஓ.....

உன் பேரும் தெரியாதே உன் ஊரும் தெரியாதே
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா
நீ என்னை பார்க்காமல் நான் உன்னை பார்கின்றேன்
நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியும்மா
உயிருக்குள் இன்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா
இதயத்தில் மலையின் எடையை உணர்கின்றேன் காதல் இதுவா

கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே

வீதி உலா நீ வந்தால் தெருவிளக்கும் கண்ணடிக்கும்
வீடு செல்ல சூரியனும் அடம் பிடிக்குமே
நதியோடு நீ குளித்தால் மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னை தொட்டு பார்க்க தான் மழை குதிக்குமே
பூகம்பம் வந்தால் கூட ஓஹோ பதறாத நெஞ்சம் எனது
பூவொன்று மோதியதாலே ஓஹோ பட்டென்று சரிந்தது இன்று

கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே
குடையில்லா நேரம் பார்த்து கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து இது தான் காதல் என்றாளே 
ஓஓஓஓ ஓஹோ ஓஓஓஓ.....

Comments

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)