செந்தாழம் பூவில் (Senthazham poovil)


படம்: முள்ளும் மலரும்
உணர்வு: வியப்பு
ஆக்கம்: வைரமுத்து

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நானா ஊடலோ
ஆலம் கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷையின்றி ராகமென்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைதான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவின் ஆட்சி

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம்

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)