சம்சாரம் என்பது வீணை (samsaram enbathu veenai)

படம்: மயங்குகிறாள் ஒரு மாது
ஆக்கம்: கண்ணதாசன்

சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை

என் வாழ்க்கை திறந்த ஏடு அது ஆசை கிளியின் கூடு
என் வாழ்க்கை திறந்த ஏடு அது ஆசை கிளியின் கூடு
பல காதல் கவிதை பாடி பரிமாறும் உண்மைகள் கோடி
இதுபோன்ற ஜோடியில்லை இதுபோன்ற ஜோடியில்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை

என் மாடம் முழுதும் விளக்கு ஒரு நாளும் இல்லை இருட்டு
என் மாடம் முழுதும் விளக்கு ஒரு நாளும் இல்லை இருட்டு
என் உள்ளம் போட்ட கணக்கு ஒரு போதும் இல்லை வழக்கு
இதுபோன்ற ஜோடி இல்லை இதுபோன்ற ஜோடி இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை

தை மாத மேக நடனம் என் தேவி காதல் நளினம்
தை மாத மேக நடனம் என் தேவி காதல் நளினம்
இந்த காதல் ராணி மனது அது காலம் தோறும் எனது
இதில் மூடும் திரைகள் இல்லை இதில் மூடும் திரைகள் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை

Comments

  1. nice but some words are missing and extra words also added.....pl check

    ReplyDelete
    Replies
    1. Thanks for the feedback. I have reviewed and fixed the issues, not sure whether I did completely. Please do let me know if it is not fixed yet.

      Delete
  2. There is no aasiyin kiliyin koodu in the first charanam. It is only aasai kiliyin koodu

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)