Posts

Showing posts from 2012

புத்தன் ஏசு காந்தி பிறந்தது (Buddhan Yesu Gandhi piranthathu)

படம்: சந்திரோதயம் உணர்வு: எழுச்சி ஆக்கம்: வாலி புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக கங்கை யமுனை காவிரி வைகை ஒடுவதெற்காக நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக கேள்விகுறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக மானம் ஒன்றே பெரிதென்று எண்ணி பிழைக்கும் நமக்காக புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு பகை வந்த போது துணை ஒன்று உண்டு நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு பகை வந்த போது துணை ஒன்று உண்டு இருள் வந்த போது விளக்கொன்று உண்டு எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு உண்மை என்பது எங்கும் உள்ளது தெய்வத்தின் மொழியாகும் நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும் புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும் அழுதவர் சிரிப்பதும் சிரித்தவர் அ...

அச்சம் என்பது மடமையடா (Achcham enbathu madamaiyada)

படம்: மன்னாதி மன்னன் உணர்வு: எழுச்சி ஆக்கம்: கவியரசு கண்ணதாசன் அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா  அஞ்சாமை திராவிடர் உடமையடா  அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா தாயகம் காப்பது கடமையடா அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா கனகவிஜயரின் முடித்தலை நெரித்து கல்லினை வைத்தான் சேரமகன் கனகவிஜயரின் முடித்தலை நெரித்து கல்லினை வைத்தான் சேரமகன் இமயவரம்பினில் மீன் கொடியேற்றி இசைபட வாழ்ந்தான் பாண்டியனே அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா கருவினில் வளரும் மழலையில் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை கருவினில் வளரும் மழலையில் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் ...

தூங்காதே தம்பி தூங்காதே (Thoongathae thambi thoongathae)

படம்: நாடோடி மன்னன் உணர்வு: எழுச்சி ஆக்கம்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடியவர்: T.M. சௌந்தர்ராஜன் தூங்காதே தம்பி தூங்காதே தூங்காதே தம்பி தூங்காதே நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே நீ தாங்கிய உடையும் ஆயுதமும் பல சரித்திர கதை சொல்லும் சிறைக்கதவும் நீ தாங்கிய உடையும் ஆயுதமும் பல சரித்திர கதை சொல்லும் சிறைக்கதவும் சக்தி இருந்தால் உனை கண்டு சிரிக்கும் சக்தி இருந்தால் உனை கண்டு சிரிக்கும் சத்திரம் தான் உனக்கு இடம் கொடுக்கும் தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார் நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார் சிலர் அல்லும் பகலும் தெருகல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டி கொண்டார் அல்லும் பகலும் தெருகல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டி கொண்டார் விழித்து கொண்டோர் எல்லாம் பிழைத்து கொண்டார் விழித்து கொ...

ஒன்றே குலமென்று பாடுவோம் (Onre Kulamendru paaduvom)

படம்: பல்லாண்டு வாழ்க உணர்வு: எழுச்சி ஆக்கம்: புலமைபித்தன் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம் ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம் ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் கடவுளிலே கருணை தன்னை காணலாம் அந்த கருணையிலே கடவுளையும் காணலாம் கடவுளிலே கருணை தன்னை காணலாம் அந்த கருணையிலே கடவுளையும் காணலாம் நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம் அங்கு ஒருபோதும் மறையாது அவன் காட்சியாம் ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் பாவமென்ற கல்லறைக்கு பலவழி என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி பாவமென்ற கல்லறைக்கு பலவழி என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி இந்த வழியொன்று தான் எங்கள் வழியென்று நாம் நேர்மை ஒருநாளும் தவறாமல் நடைபோடுவோம் ஒன்...

மாடி மேல மாடி கட்டி (Madi mela madi katti)

படம்: காதலிக்க நேரமில்லை உணர்வு: கிண்டல் மாடி மேல மாடி கட்டி கோடிகோடி சேர்த்து விட்ட சீமானே Hello Hello come on come on சீமானே ஆளு அம்பு சேனை வச்சு Car வச்சு போரடிக்கும் கோமானே Hello Hello come on come on கோமானே மாடி மேல மாடி கட்டி கோடிகோடி சேர்த்து விட்ட சீமானே Hello Hello come on come on சீமானே ஆளு அம்பு சேனை வச்சு Car வச்சு போரடிக்கும் கோமானே Hello Hello come on come on கோமானே விஸ்வநாதன் வேலை வேணும் விஸ்வநாதன் வேலை வேணும்  விஸ்வநாதன் வேலை வேணும் விஸ்வநாதன் வேலை வேணும்  பொண்ணுங்க பேச்சுக்கு புத்தியை மாத்திக்க மூளை இல்லாதவரே வேட்டியை மாத்திக்க சேலையை கட்டிக்க வெட்கம் இல்லாதவரே பொண்ணுங்க பேச்சுக்கு புத்தியை மாத்திக்க மூளை இல்லாதவரே வேட்டியை மாத்திக்க சேலையை கட்டிக்க வெட்கம் இல்லாதவரே வேலையின்றி போகாது வேறு வேலை தேடாது பாட்டு பாடி கூச்சல் போட்டு வேலை வாங்குவோம் வேலையின்றி போகாது வேறு வேலை தேடாது பாட்டு பாடி கூச்சல் போட்டு வேலை வாங்குவோம் விஸ்வநாதன் வேலை வேணும் விஸ்வநாதன் வேலை வேணும்  விஸ்வநாதன் வேலை வேணும் விஸ்வநாதன் வேலை வேணு...

உங்க பொன்னான (Unga ponaana)

படம்: காதலிக்க நேரமில்லை உணர்வு: கிண்டல் உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா சேலாட்டம் கண்ணும் நூலாட்டும் இடையும் திண்டாட்ட படலாமா ஹோய் தாலாட்டும் பெண்ணின் பூவாட்டம் கைகள் காரோட்ட வரலாமா கட்டான மேனி கலங்கிட குலுங்கிட வேலை செய்யலாமா இது நாகரீகமா போற வேகமா நானும் வரலாமா ஒ ஹோய் உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா  உதவிக்கு வரலாமா சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா ஆனான படிப்பு நீ படித்தாலும் அதுக்கது துணை வேணும் கோடானகோடி பணமிருந்தாலும் கும்பிட்டு விழ வேணும் ஆனான படிப்பு நீ படித்தாலும் அதுக்கது துணை வேணும் கோடானகோடி பணமிருந்தாலும் கும்பிட்டு விழ வேணும் கொஞ்சாத கிளியும் கூவாத குயிலும் உலகினில் கிடையாது இந்த கோபம் மாறுமா போக முடியுமா நான் தான் விடுவேனா ஒ ஹோய் உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா கண்ணாலே வார்த்தை சொன்னாலும் போதும் முன்னாலே வருவேனே கல்யாண தேரில் உல்...

உன்னை காணாத (Unnai kaanatha)

Image
படம்: இதய கமலம் உணர்வு: பாசம் உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல இங்கு நீயொரு பாதி நானொரு பாதி இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி இங்கு நீயொரு பாதி நானொரு பாதி இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலுமில்லை ஒரு கோவிலில்லாமல் தீபமுமில்லை ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலுமில்லை ஒரு கோவிலில்லாமல் தீபமுமில்லை நீயெந்தன் கோவில் நான் அங்கு தீபம் தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல என்மேனியில் உன்னை பிள்ளையை போலே நான் வாரி அணைப்பேன் ஆசையினாலே என்மேனியில் உன்னை பிள்ளையை போலே நான் வாரி அண...

வாராயோ வெண்ணிலவே (Vaarayo vennilavae)

படம்: மிஸ்ஸியம்மா உணர்வு: விரோதம் வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலவே அகம்பாவம் கொண்ட சதியால் அறிவால் உயர்ந்திடும் பதிநான் சதிபதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலவே வாக்குரிமை தந்த பசியால் வாழ்ந்திடவே வந்த சதிநான் வாக்குரிமை தந்த பசியால் வாழ்ந்திடவே வந்த சதிநான் நம்பிட செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளிவேஷம் வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலவே தன்பிடிவாதம் விடாது என்மனம் போல் நடக்காது தன்பிடிவாதம் விடாது என்மனம் போல் நடக்காது நமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேச விடாது வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலவே அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலவே

விண்ணோடும் முகிலோடும் (Vinnodum Mugilodum)

படம்: புதையல் விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலே அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலே விளையாடி இசைபாடி விழியாலே உறவாடி இன்பம் காணலாம் விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே தேடாத செல்வ சுகம் தானாக  வந்ததுபோல் ஓடோடி வந்த சொர்கபோகமே ஓடோடி வந்த சொர்கபோகமே காணாத இன்பநிலை கண்டாடும் நெஞ்சினிலே ஆனந்த போதையூட்டும் யோகமே வாழ்விலே விளையாடி இசைபாடி விழியாலே உறவாடி இன்பம் காணலாம் விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே சந்தோசம் காண உள்ளம் நாடுதே சந்தோசம் காண உள்ளம் நாடுதே மங்காத தங்கமிது மாறாத வைரமிது ஒன்றாகி இன்பகீதம் பாடுதே வாழ்விலே விளையாடி இசைபாடி விழியாலே உறவாடி இன்பம் காணலாம் விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசைய...

உலவும் தென்றல் காற்றினிலே (Ulavum thendral kaatrinilae)

படம்: மந்திரிகுமாரி உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே அலைகள் வந்து மோதியே ஆடி உந்தன் பாட்டிற்கென்றே தாளம் போடுதே அலைகள் வந்து மோதியே ஆடி உந்தன் பாட்டிற்கென்றே தாளம் போடுதே உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வை காட்டுதே உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வை காட்டுதே இதயம் அந்த மலைக்குயேது அன்பை காட்டவே இதயம் அந்த மலைக்குயேது அன்பை காட்டவே தெளிந்த நீரை போன்ற தூய காதல் கொண்டோம் நாம் தெளிந்த நீரை போன்ற தூய காதல் கொண்டோம் நாம் களங்கம் அதிலும் காணுவாய் களங்கம் அதிலும் காணுவாய் கவனம் வைத்தே பார் குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே உலக வாழ்க்கை ஆற்றினிலே காதலெனும் தோனிதனில் ஊர்ந்து செல்லுவோம் உலக வாழ்க்கை ஆற்றினிலே காதலெனும் தோனிதனில் ஊர்ந்து செல்லுவோம்

இசைத்தமிழ் நீ செய்த (Isaithamizh nee seitha)

படம்: திருவிளையாடல் இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை இறைவா இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை வசை வருமே பாண்டி நாட்டினிலே இறைவா வசை வருமே பாண்டி நாட்டினிலே குழலி மணவாளனே உனது வீட்டினிலே வசை வருமே பாண்டி நாட்டினிலே குழலி மணவாளனே உனது வீட்டினிலே  உயிர் மயக்கம் நாத பாட்டினிலே உயிர் மயக்கம் நாத பாட்டினிலே வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோ வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோ இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை தாய்க்கொரு பழிநேர்ந்தால் மகர்க்கில்லையோ அன்னை தமிழுக்கு...

பாத்தா பசுமரம் (Paatha pasumaram)

படம்: திருவிளையாடல் பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா  ஞானத்தங்கமே தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா கட்டழுகு மேனியை பார் பொட்டும் பூவுமா நீட்டி கட்டையில படுத்துவிட்டா காசுக்காகுமா கட்டழுகு மேனியை பார் பொட்டும் பூவுமா நீட்டி கட்டையில படுத்துவிட்டா காசுக்காகுமா வட்டமிடும் காளையை பார் வாட்டசாட்டமா வட்டமிடும் காளையை பார் வாட்டசாட்டமா கூனி வளைஞ்சுவிட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமா கூனி வளைஞ்சுவிட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமா பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா  ஞானத்தங்கமே தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா பொன்னும் பொருளும் மூட்டகட்டி போட்டு வச்சாரு பொன்னும் பொருளும் மூட்டகட்டி போட்டு வச்சாரு இவரு போன வருஷம் மழைய நம்பி வெதவெதச்சாரு பொன்னும் பொருளு...

ஓராயிரம் பார்வையிலே (Orayiram paarvayilae)

படம்: வல்லவனுக்கு வல்லவன் உணர்வு: தவிப்பு நூறுமுறை பிறந்தாலும்  நூறுமுறை இறந்தாலும் உனைபிரிந்து வெகு தூரம் நான்  ஒருநாளும் போவதில்லை உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும் ஒன்றான உள்ளங்கள் ஒருநாளும் மறைவதில்லை ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் உன்காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் இந்த மானிட காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும் அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும் நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் உன்காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் இந்த காற்றினில் நான் கலந்தேன் உன் கண்களை தழுவுகின்றேன் இந்த ஆற்றினில் ஓடுகின்றேன் உன் ஆடையில் ஆடுகின்றேன் நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் உன்காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்

அதோ அந்த பறவை போல (Atho antha paravai pola)

படம்: ஆயிரத்தில் ஒருவன் உணர்வு: எழுச்சி ஆக்கம்: கண்ணதாசன் அதோ அந்த பறவை போல வாழவேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமைகீதம் பாடுவோம் அதோ அந்த பறவை போல வாழவேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமைகீதம் பாடுவோம் காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே கடல் நீரும் அடிமை என்று  சுடுவதில்லையே காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமைகீதம் பாடுவோம் அதோ அந்த பறவை போல வாழவேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமைகீதம் பாடுவோம் தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே  பேசவில்லையே  வாழும் போது பசியில்லாமல் வாழவில்லையே போகும் போது வேறு பாதை போகவில்லையே ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமைகீதம் பாடுவோம் அதோ அந்த பறவை போல வாழவேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ...

ஓடும் மேகங்களே (Odum maegangalae)

படம்: ஆயிரத்தில் ஒருவன் உணர்வு: தவிப்பு ஆக்கம்: கவிஞர் கண்ணதாசன் ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன் நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன் நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு வாடுவதே என் பாடு இதில் நான் அந்த மான்  நெஞ்சை நாடுவதெங்கே கூறு ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு பாதியிலே வெகு தூரம் பயணம் போகின்ற நேரம் காதலை யார் மனம் தேடும் இதில் நான் அந்த மான்  நெஞ்சை நாடுவதெங்கே கூறு ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தா...

கடவுள் ஒரு நாள் உலகை (Kadavul oru naal ulagai)

படம்: சாந்தி நிலையம் ஆக்கம்: கவிஞர் கண்ணதாசன் கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம் கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம் ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான் ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான் படைத்தவனோ உடனே சிரித்து விட்டான் கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம் கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது காசும் பணமும் ஆசையும் யார் தந்தது கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது காசும் பணமும் ஆசையும் யார் தந்தது எல்லையில்லா நேரம் நிலமும் நான் தந்தது எங்கும் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது இறைவனுக்கே இது புரியவில்லை மனிதரின் கொள்கை தெரியவில்லை ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான் ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான் படைத்தவனோ உடனே சிரித்து விட்டான் கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம் பள்ளிக்கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றானாம் பச்சை பிள்ளை மழலை மொழியில் தன்...

பூமியில் இருப்பதும் (Boomiyil irupathum)

படம்: சாந்தி நிலையம் உணர்வு: தன்னம்பிக்கை ஆக்கம்: கவிஞர் கண்ணதாசன் பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே இருக்கும் இடம் எதுவோ டாச்சூ டாச்சூ நினைக்கும் இடம் பெரிது டாச்சூ டாச்சூ போய்வரும் உயரமும் புதுப்புது உலகமும் அவரவர் உள்ளங்களே நெஞ்சினில் துணிவிருந்தால் டாச்சூ டாச்சூ நிலவுக்கும் போய்வரலாம் டாச்சூ டாச்சூ பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே இருக்கும் இடம் எதுவோ நினைக்கும் இடம் பெரிது போய்வரும் உயரமும் புதுப்புது உலகமும் அவரவர் உள்ளங்களே நெஞ்சினில் துணிவிருந்தால் டாச்சூ டாச்சூ நிலவுக்கும் போய்வரலாம் டாச்சூ டாச்சூ டாச்சூ  டாச்சூ  உலகம் போகின்ற வேகம் உருவமும் இனிமேல் மாறும் உலகம் போகின்ற வேகம் உருவமும் இனிமேல் மாறும் நடக்கும் கதைகளை பார்த்தால் நமக்கே சிறகுகள் முளைக்கும் ரஷ்சியர்கள் அனுப்பிய கூடு ராக்கெட் என்பது பேரு சிஷ்யர்கள் அனுப்பிய கூடு தெரியுது வானத்தில் பாரு பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே இருக்கும் இடம் எதுவோ டாச்சூ டாச்சூ நினைக்கும் இடம் பெரிது டாச்சூ டா...

செந்தமிழ் தேன்மொழியாள் (Senthamizh thenmozhiyaal)

படம்: மாலையிட்ட மங்கை சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள் நிற்குமோ நெஞ்சம் நிலைக்குமோ ஆவி மனம் பெறுமோ வாழ்வே செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்தி பூச்சரமோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்தி பூச்சரமோ அவள் செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் கண்களில் நீளம் விழைத்தவளோ அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ கண்களில் நீளம் விழைத்தவளோ அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்...

உள்ளத்திலே உரம் வேணுமடா (Ullathilae uram venumadaa)

படம்: விஜயபுரி வீரன் உணர்வு: எழுச்சி உள்ளத்திலே உரம் வேணுமடா உள்ளத்திலே உரம் வேணுமடா உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா உள்ளத்திலே உரம் வேணுமடா உள்ளத்திலே உரம் வேணுமடா உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா வல்லவன் போலே பேசக்கூடாது வானரம் போலே சீறக்கூடாது வல்லவன் போலே பேசக்கூடாது வானரம் போலே சீறக்கூடாது வாழத்தெரியாமலே கோழைத்தனமாகவே வாலிபத்தை விட்டு விட கூடாது மானமொன்றே பிரதானமென்றே மறந்துவிடாதே வாழ்வினிலே மானமொன்றே பிரதானமென்றே மறந்துவிடாதே வாழ்வினிலே வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் ஏட்டு சுரைக்காயெல்லாம் மூட்டை கட்டியாகணும் நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும் ஏட்டு சுரைக்காயெல்லாம் மூட்டை கட்டியாகணும் நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும் மானமொன்றே பிரதானமென்றே மறந்துவிடாதே வாழ்வினிலே மானமொன்றே பிரதானமென்றே மறந்துவிடாதே வாழ்வினிலே உள்ளத்திலே உரம் வேணுமடா உள்ளத்திலே உரம் வேணுமடா உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா உள்ளத்தி...

அழகிய மிதிலை நகரினிலே (Azhagiya mithilai nagarinilae)

படம்: அன்னை அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள் அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள் காவிய கண்ணகி இதயத்திலே காவிய கண்ணகி இதயத்திலே கனிந்தவர் யார் இளம் பருவத்திலே கோவலன் என்பதை ஊர் அறியும் கோவலன் என்பதை ஊர் அறியும் சிறு குழந்தைகளும் அவன் பேர் அறியும் அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள் பருவத்து பெண்கள் தனித்திருந்தால் பருவத்து பெண்கள் தனித்திருந்தால் பார்ப்பவர் மனதில் என்ன வரும் இளையவர் என்றால் ஆசை வரும் இளையவர் என்றால் ஆசை வரும் முதியவர் என்றால் பாசம் வரும் முதியவர் என்றால் பாசம் வரும் ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால் உள்ளத்தை நன்றாய் புரிந்து கொண்டால் இருவர் என்பது மாறி விடும் இருவர் என்பது மாறி விடும் இரண்டும் ஒன்றாய் கலந்து விடும் அழகிய ம...

எத்தனை காலம் தான் (Ethanai kaalam thaan)

படம்: மலைக்கள்ளன் உணர்வு: எழுச்சி எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இன்னும்  எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே  சொந்த நாட்டிலே நம்ம நாட்டிலே சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார் சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார் சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி பாமர மக்களை வலையினில் மாட்டி எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இந்த நாட்டிலே  சொந்த நாட்டிலே நம்ம நாட்டிலே தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் கல்வி தெரியாத பேர்களை இல்லாமல் செய்வோம் கல்வி தெரியாத பேர்களை இல்லாமல் செய்வோம் கருத்தாக பல தொழில் பயிலுவோம் கருத்தாக பல தொழில் பயிலுவோம் ஊரில் கஞ்சிகில்லை என்ற சொல்லினை போக்குவோம் ஊரில் கஞ்சிகில்லை என்ற சொல்லினை போக்குவோம் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம்ம நாட்டிலே ஆளுக்கொரு வீடு கட்டுவோம் ஆளுக்கொரு வீடு கட்டுவோம் அதில் ஆய கலைகளை சீராக பயில்...

ஆசையே அலை போலே (Aasaiyae alai polae)

Image
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் உணர்வு: அனுபவம் ஆக்கம்: கவிஞர் கண்ணதாசன் ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே பருவமென்னும் காத்திலே பறக்கும் காதல் தேரிலே பருவமென்னும் காத்திலே பறக்கும் காதல் தேரிலே ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார் அதிசயம் காண்பார் நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார் ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன் வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன் இளமை மீண்டும் வருமா மணம்  பெறுமா முதுமையே சுகமா காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார் ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே சூறை காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ சூறை காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார் ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன்...

மனப்பார மாடு கட்டு (Mannapara maadu kattu)

படம்: மக்களை பெற்ற மகராசி உணர்வு: பொறுப்பு பொன்னு  விளையுற பூமியடா விவசாயத்த பொறுப்பா கவனிச்சு செய்வோமடா உண்மையா உழைக்கிற நமக்கு எல்லா நன்மைகளும் நாடி வந்து கூடுதடா மனப்பார மாடு கட்டு மாயவரம் ஏறு பூட்டி  வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு மனப்பார மாடு கட்டு மாயவரம் ஏறு பூட்டி  மனப்பார மாடு கட்டு மாயவரம் ஏறு பூட்டி  வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு ஆத்தூரு கிச்சடி சம்பா  ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி வெதவெதச்சு  ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி வெதவெதச்சு  நாத்த பறிச்சு நட்டு போடு சின்னக்கண்ணு தண்ணிய ஏத்த புடிச்சு ஏறச்சு போடு செல்லக்கண்ணு நாத்த பறிச்சு நட்டு போடு சின்னக்கண்ணு தண்ணிய ஏத்த புடிச்சு ஏறச்சு போடு செல்லக்கண்ணு கருத நல்ல விளைய வச்சு மருத ஜில்லா ஆள வச்சு கருத நல்ல விளைய வச்சு மருத ஜில்லா ஆள வச்சு அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி துருத்தி அளந்து போடு செல்லக்கண்ணு எ...

நான் உங்கள் வீட்டு பிள்ளை (Naan ungal veetu pillai)

படம்: புதிய பூமி உணர்வு: எழுச்சி ஆக்கம்: பூவை செங்குட்டுவன் நான் உங்கள் வீட்டு பிள்ளை  இது ஊரறிந்த உண்மை நான் உங்கள் வீட்டு பிள்ளை  இது ஊரறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை நான் உங்கள் வீட்டு பிள்ளை  இது ஊரறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை காலம் தோறும் பாடம் கூறும் மாறுதல் இங்கே தேவை ஏழை எளியோர் துயரம் போக்கும் செயலே எந்தன் சேவை காலம் தோறும் பாடம் கூறும் மாறுதல் இங்கே தேவை ஏழை எளியோர் துயரம் போக்கும் செயலே எந்தன் சேவை இதயம் என்பது ரோஜாவானால் நினைவை நறுமணம் ஆகும் இதயம் என்பது ரோஜாவானால் நினைவை நறுமணம் ஆகும் எங்கே இதயம் வாழும் அன்பே என்னை ஆளும் நான் உங்கள் வீட்டு பிள்ளை  இது ஊரறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை கோவிலென்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே உள்ளமென்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே கோவிலென்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே உள்ளமென்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே பிறந்த நாடே சிறந்த கோவ...

பரமசிவன் கழுத்தில் (Paramasivan kazhuthil)

படம்: சூரியகாந்தி ஆக்கம்: கண்ணதாசன் பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தமும் உள்ளது உயர்ந்த இடத்தில் இருக்கும் பொது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் உயர்ந்த இடத்தில் இருக்கும் பொது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதருக்கு ஔவை சொன்னது அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தமும் உள்ளது வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும் உனைப்போலே அளவோடு உறவாட வேண்டும் உயர்ந்தோரும் தாழ்ந்தோறும் உறவு கொள்வது அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது ...

ஒ ரசிக்கும் சீமானே (O rasikkum seemanae)

படம்: பராசக்தி உணர்வு: உற்சாகம் ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடை அணிந்து களிக்கும் நடனம் புரிவோம் அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் ஒ ரசிக்கும் சீமானே  ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடை அணிந்து களிக்கும் நடனம் புரிவோம் அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் கற்சிலையும் சித்திரமும் கண்டு  அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு கற்சிலையும் சித்திரமும் கண்டு  அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமென்றே  மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமென்றே  மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில்  சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் ஒ ரசிக்கும் சீமானே  ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடை அணிந்து களிக்கும் நடனம் புரிவோம் அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் வானுலகம் போற்ற...

தேசம் ஞானம் கல்வி (Desam gnanam kalvi)

Image
படம்: பராசக்தி உணர்வு: எழுச்சி ஆக்கம்: உடுமலை நாராயணகவி தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்  காசு முன் செல்லாதடி தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் சொல்லாதடி குதம்பாய்  காசு முன் செல்லாதடி ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில் காசுக்கு பின்னாலே குதம்பாய்  காசுக்கு பின்னாலே   காட்சியான பணம் கைவிட்டு போனபின் சாட்சி Court ஏறாதடி காட்சியான பணம் கைவிட்டு போனபின் சாட்சி Court ஏறாதடி குதம்பாய்  சாட்சி Court ஏறாதடி பைபையாய் பொன் கொண்டோர் பொய் பொய்யாய் சொன்னாலும் மெய் மெய்யாய் போகுமடி குதம்பாய்  மெய் மெய்யாய் போகுமடி நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது குதம்பாய்  நாடு மதிக்காது   கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல் வெள்ளி பணமடியே குதம்பாய்  வெள்ளி பணமடியே ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே காசு காரியத்தில் கண்வையடா தாண்டவகோனே   ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே காசு காரியத்தில் கண்வையடா தாண்டவகோனே உள்ளே பகை வையடா தாண்டவகோனே காசுக்கு உதட்டில் ...

வந்த நாள் முதல் (Vantha naal muthal)

படம்: பாவ மன்னிப்பு உணர்வு: வேதனை ஆக்கம்: கவிஞர் கண்ணதாசன் வந்த நாள் முதல் இந்த நாள் வரை வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை வான் மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான் நிலை மாறினால் குணம் மாறுவான் பொய் நீதியும் நேர்மையும் பேசுவான் தினம் ஜாதியும் பேதமும் கூறுவான் அது வேதன் விதி என்றோதுவான் மனிதன் மாறிவிட்டான்  மதத்தில் ஏறிவிட்டான் பறவையை கண்டான் விமானம் படைத்தான் பறவையை கண்டான் விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினை கண்டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் எதனை கண்டான் பணம்தனை படைத்தான் எதனை கண்டான் பணம்தனை படைத்தான் மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் இன்பமும் காதலும் இயற்கையின் நீதி ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி பாரில் இயற்கை படைத்ததை எல்லாம் பாவி மனிதன் பிரித்து வைத்தானே மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை வான் மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதிய...

உள்ளம் என்பது ஆமை (Ullam enbathu aamai)

படம்: பார்த்தால் பசி தீரும் உணர்வு: வேதனை ஆக்கம்: கண்ணதாசன் உள்ளம் என்பது ஆமை  அதில் உண்மை என்பது ஊமை உள்ளம் என்பது ஆமை  அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி உள்ளம் என்பது ஆமை  அதில் உண்மை என்பது ஊமை தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலை என்றால் வெறும் சிலை தான் தெய்வம் என்றால் அது தெய்வம் அது  சிலை என்றால் வெறும் சிலை தான் உண்டென்றால் அது உண்டு இல்லையென்றால் அது இல்லை இல்லையென்றால் அது இல்லை தண்ணீர் தணல் போல் எரியும் செந்தணலும் நீர் போல் குளிரும் தண்ணீர் தணல் போல் எரியும் செந்தணலும் நீர் போல் குளிரும் நண்பனும் பகைபோல் தெரியும் அது நாட்பட நாட்பட புரியும் அது நாட்பட நாட்பட புரியும் உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை

உன்னை அறிந்தால் (Unnai arinthaal)

படம்: வேட்டைக்காரன் உணர்வு: தன்னம்பிக்கை ஆக்கம்: கண்ணதாசன் உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன்னென்று போற்றி புகழ வேண்டும் மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன்னென்று போற்றி புகழ வேண்டும் உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தால...

நான் காற்று வாங்க போனேன் (Naan kaatru vanga ponaen)

படம்: கலங்கரை விளக்கம் உணர்வு: ஏக்கம் நான் காற்று வாங்க போனேன்  ஒரு கவிதை வாங்கி வந்தேன் அதை கேட்டு வாங்கி போனாள்  அந்த கன்னி என்னவானாள் நான் காற்று வாங்க போனேன்  ஒரு கவிதை வாங்கி வந்தேன் அதை கேட்டு வாங்கி போனாள்  அந்த கன்னி என்னவானாள் நான் காற்று வாங்க போனேன்  ஒரு கவிதை வாங்கி வந்தேன் என் உள்ளம் என்ற ஊஞ்சல்  அவள் உலவுகின்ற மேடை என் உள்ளம் என்ற ஊஞ்சல்  அவள் உலவுகின்ற மேடை என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவமென்ற ஓடை என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவமென்ற ஓடை அவள் கேட்டு வாங்கி போனாள்  அந்த கன்னி என்னவானாள் நான் காற்று வாங்க போனேன்  ஒரு கவிதை வாங்கி வந்தேன் நடை பழகும் போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும் நடை பழகும் போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும் அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளி கொண்டு போகும் அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளி கொண்டு போகும் அவள் கேட்டு வாங்கி போனாள்  அந்த கன்னி என்னவானாள் நல்ல நிலவு தூங்கு நேரம் அவள் நினைவு தூங்கவில்லை நல்ல நிலவு தூங்கு நேர...