உள்ளம் என்பது ஆமை (Ullam enbathu aamai)


படம்: பார்த்தால் பசி தீரும்
உணர்வு: வேதனை
ஆக்கம்: கண்ணதாசன்

உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி
சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி

உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை

தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலை தான்
தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை

தண்ணீர் தணல் போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
தண்ணீர் தணல் போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகைபோல் தெரியும்
அது நாட்பட நாட்பட புரியும்
அது நாட்பட நாட்பட புரியும்

உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை

Comments

  1. பலாபாலகிருஷ்ணன் அருமையான பாடல் நானும் பாடுவேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)