உன்னை அறிந்தால் (Unnai arinthaal)
படம்: வேட்டைக்காரன்
உணர்வு: தன்னம்பிக்கை
ஆக்கம்: கண்ணதாசன்
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்
மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா
மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்
மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்
ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன்னென்று போற்றி புகழ வேண்டும்
மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்
ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன்னென்று போற்றி புகழ வேண்டும்
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்
Comments
Post a Comment