Posts

Showing posts from April, 2012

சின்ன சின்ன மழை துளிகள் (Chinna chinna mazhai thuligal)

படம்: என் சுவாச காற்றே உணர்வு: வியப்பு ஆக்கம்: வைரமுத்து ஒரு துளி விழுது ஒரு துளி விழுது ஒரு துளி விழுது ஒரு துளி விழுது ஒரு துளி இரு துளி சிறு துளி மழை துளி  பட பட பட பட படவென சிதறுதே சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ நான் மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ நான் மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ சக்கரவாகமோ மழையை அருந்துமா நான் சக்கரவாக பறவையாவேனோ மழையின் தாரைகள் வைர விழுதுகள் விழுதை பிடித்து விண்ணில் சேர்வேனோ சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ நான் மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ ஒரு பூவினிலே விழுந்தாய் ஒரு தேன் துளியாய் வருவாய் சிறு சிப்பியிலே விழுந்தாய் ஒரு முத்தெனவே முதிர்வாய் பயிர் வேரினிலே விழுந்தாய் நவதானியமாய் விளைவாய் என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்வாய் அந்த இயற்கை அன்னை படைத்த ஒரு பெரிய shower இது அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது இவள் கன்னி என்பதை இந்த ...

செந்தாழம் பூவில் (Senthazham poovil)

படம்: முள்ளும் மலரும் உணர்வு: வியப்பு ஆக்கம்: வைரமுத்து செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா பூவாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம் வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நானா ஊடலோ ஆலம் கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசை குயில் பாஷையின்றி ராகமென்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள் பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைதான் ஆண்டவன் பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவின் ஆட்சி செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது மறவேன் மறவேன் அற்புத காட்சி செந்தாழம் பூவில் வந்...

கனவே கலையாதே (Kanavae Kalaiyathae)

படம்: கண்ணெதிரே தோன்றினாள் உணர்வு: ஏக்கம் ஆக்கம்: வைரமுத்து கனவே கலையாதே காதல் கனவே கலையாதே கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம் மரகத வார்த்தை சொல்வாயா மௌனத்தினாலே கொல்வாயா சின்ன திருவாய் மலர்வாயா கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம் கனவே கலையாதே காதல் கனவே கலையாதே நீ மௌனம் காக்கும் போதும்  உன் சார்பில் எந்தன் பேரை  உன் தோட்ட பூக்கள் சொல்லுமில்லையா ஒரு தென்றல் தட்டும் போதும்  கடும் புயலே முட்டும் போதும்  அட பூக்கள் பொய்கள் சொல்வதில்லையா உன் இதழை கேட்டால் அது பொய்கள் சொல்லும் உன் இதயம் கேட்டால் அது மெய்கள் சொல்லும் இதயத்தை கேட்க நேரமில்லை இதுவரை இதயத்தில் யாருமில்லை சந்தம் கிடைத்தால் நுழைவாயா கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம் உண்மை காதல் உண்டு அதை உள்ளே வைத்துக்கொண்டு ஒரு மன்மத சபையில் சாபம் வாங்காதே மின்னிய மழையின் துளிகள் ஒரு மேகத்துக்குள் உண்டு அது தானே பொழியும் பிழிய பார்க்காதே நீ மழை தரும் முகிலா...

நீ இல்லை நிலவில்லை (Nee illai nilavillai)

படம்: பூச்சூடவா உணர்வு: ஏக்கம் ஆக்கம்: பழனி பாரதி நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய் அழுகின்றேன் இப்போது எந்தன் கண்ணீர் ஆகின்றாய் நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை உன் பேரை நான் எழுதி என்னை நான் வாசித்தேன் எங்கேயோ எனை தேடி உன்னில் தான் சந்தித்தேன் காதேலே என் காதலே ஊஞ்சலாய் ஆனதே நான் அங்கும் இங்கும் அலைந்தது தானா சொல்லு நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை பகலின்றி வாழ்ந்திருதேன் சூரியனை தந்தாயே நிறமின்றி வாழ்ந்திருந்தேன் வானவில்லை தந்தாயே கூந்தலில் சூடினாய் வாடும் முன் வீசினாய் அடி காதலும் பூவை போன்றது தானா சொல்லு நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய் அழுகின்றேன் இப்போது எந்தன் கண்ணீர் ஆகின்றாய்

விடிய விடிய நடனம் (Vidiya vidiya nadanam)

Image
படம்: இதயத்தை திருடாதே உணர்வு: தன்னம்பிக்கை விடிய விடிய நடனம் சந்தோசம் விழியில் வழியும் தருணம் ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புது யுகம் பிறந்து பிறந்து எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும் தான் புதிய புதிய ஜனனம் பயம் என்னடா எமனிடம் நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம் நம் கண்களில் நாளைய காவியம் நாம் இட்டது இங்கொரு சட்டமாக கூடும் காலங்கள் உதயமாகட்டும் கவலைகள் விலகி ஓடட்டும் காட்டாறு நாமல்லவோ ஹே ஹேய் வாமனிதா உலகை ஆளலாம் வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் ராஜாதி ராஜாக்கள் போல் ஏனென்று கேள்வி கேட்பவன் யாரும் இல்லை எங்கேயும் கால்கள் போகலாம் ஏது எல்லை கொண்டாட்டம் கும்மாளம் தானே தப்பாத தாளங்கள் நாம் போட தகதக தகதிமி தகஜணு விடிய விடிய நடனம் சந்தோசம் விழியில் வழியும் தருணம் ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புது யுகம் பிறந்து பிறந்து எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும் தான் புதிய புதிய ஜனனம் பயம் என்னடா எமனிடம் பாடுங்கள் புதிய கீர்த்தனம் எழுதுங்கள் புதிய சாசனம் மாறட்டும் சமுதாயமே ஒ ஓஹோ ஆடுங்கள் புதிய தாண்டவம் அழியட்டும் பழ...

வாலிப வயசுக்கு (Valiba vayasukku)

படம்: பூச்சூடவா ஆக்கம்: பழனி பாரதி உணர்வு: தன்னம்பிக்கை வாலிப வயசுக்கு வங்கக்கடல் காலளவு Everest சிகரம் கூட எங்களுக்கு தோளளவு கங்கைக்கு பள்ளம் கண்டு நடுக்கமா காற்றென்ன passport எடுக்குமா அழகை கண்டால் கைகள் கட்டு அநியாயத்தை தலையில் கொட்டு வட்டங்கள் போட்டுவைக்கும் சட்டங்களை தாண்டி விடு (வாலிப வயசுக்கு வங்கக்கடல் காலளவு...) வங்கத்தில் புயல் தான் இல்லையேல் சென்னைக்கு மழை தான் இல்லையே வாழ்கையில் சோதனை இல்லையேல் உற்சாகம் இளமைக்கு இல்லையே Sunday Monday பூவுக்கு இல்லை பஞ்சாங்கம் எல்லாம் வாழ்க்கைக்கு தொல்லை விருதுக்கு முத்தம் கொடு வெற்றிக்கு Shakehand கொடு அன்புக்கு விட்டுகொடு சுற்றும் பூமி நம்மை சுற்றும் (வாலிப வயசுக்கு வங்கக்கடல் காலளவு...) வாலிபம் நடக்கும் சாலையில் கேள்விகள் எதுவும் இல்லையே தோள்களில் இளமை உள்ளதால் தோல்விகள் எதுவும் இல்லையே மலை எதிர்த்தாலும் சட்டைய கழட்டு வானத்தை கூட ஹேய் குப்புற புரட்டு எங்கெங்கும் பச்சை கொடி நிக்காது எங்கள் வண்டி இன்னொரு சூரியனை வானத்திலே ஏற்றி வைப்போம் (வாலிப வயசுக்கு வங்கக்கடல் காலளவு...)

வானிலே மேடை அமைந்தது (Vaanilae maedai amainthathu)

படம்: நினைத்தாலே இனிக்கும் லலா லலா வானிலே மேடை அமைந்தது ஆனந்த வாலிப திருவிழா மேனியில் நாணம் அகன்றது மேகத்தின் தேரினில் ஊர்வலம் வானிலே மேடை அமைந்தது ஆனந்த வாலிப திருவிழா மேனியில் நாணம் அகன்றது மேகத்தின் தேரினில் ஊர்வலம் ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம் ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம் ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம் ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம் சயனோரா.... சயனோரா வேஷம் கலைந்தது பாவையின் நாடகம் முடிந்தது சிங்கபுரா ராகம் மறந்தது காவியம் பாதியில் நின்றது சயனோரா வேஷம் கலைந்தது பாவையின் நாடகம் முடிந்தது சிங்கபுரா ராகம் மறந்தது காவியம் பாதியில் நின்றது ஆகாயத்தில் ஆரம்பம் இதயத்தில் இன்று பூகம்பம் ஆகாயத்தில் ஆரம்பம் இதயத்தில் இன்று பூகம்பம் சயனோரா வேஷம் கலைந்தது பாவையின் நாடகம் முடிந்தது சிங்கபுரா ராகம் மறந்தது காவியம் பாதியில் நின்றது

சந்திர மண்டலத்தை (Chandhira mandalathai)

படம்: நிலாவே வா சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம் வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்  ஹேய் சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம் வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம் இந்த பூமியை மெல்லமெல்ல மாற்றுவோம் அந்த பூமியை நிலவுக்கு ஏற்றுவோம் புத்துலகம் கண்டு வைப்போம் சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம் வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம் கண்ணில் ஒரு கள்ளம் இல்லை விண்வெளியில் பறக்க ஒரு visa தேவையில்லை கை விலங்கு ஏதுமில்லை பூமி ஒரு பள்ளிக்கூடம் பூவை மட்டும் படித்திருப்போம் புத்தகம் தேவையில்லை எங்கள் புத்தியில் பாரமில்லை ஆணும் பெண்ணும் அன்பால் அன்பால் நட்பை வளர்க்கலாம் ஹேய் காதலையும் கடந்து ஒரு கற்பை வளர்க்கலாம் நாம் கண்டோம் புதிய இயக்கம் இது கண்ணீர் துளியை ஒழிக்கும் நாம் காணும் கனவு பலிக்கும் எங்களுக்கும் ரெக்கை முளைத்திடும் சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம் வார்த்தைகள் கோலமிட்டு புத்தம...

ஜனகனமன ஜனங்களை (jana gana mana)

படம்: ஆயுத எழுத்து உணர்வு: எழுச்சி ஜனகனமன ஜனங்களை நினை கனவுகள் வெல்ல காரியம் துணை ஒளியே வழியாக மலையே படியாக பகையோ பொடியாக சட் சட் சட் சட் சட் ச பூம்சை ஜனகனமன ஜனங்களை நினை கனவுகள் வெல்ல காரியம் துணை ஒளியே வழியாக மலையே படியாக பகையோ பொடியாக சட் சட் சட் சட் சட் ச பூம்சை ஒ யுவா யுவா ஒ யுவா ஆயுதம் எடு ஆணவம் சுடு தீப்பந்தம் எடு தீமையை சுடு இருளை எரித்து விடு ஏழைக்கும் வாழ்வுக்கும் இருக்கின்ற இடைவெளி குறைத்து நிலைநிறுத்து அட கொட்டத்தில் விட்டத்தின் சட்டத்தின் வட்டத்தை உடைத்து காட்டுக்குள் நுழைகின்ற காற்று என்றும் காலனி எதுவும் அணிவதில்லை ஆயிரம் இளைஞர்கள் துணிந்துவிட்டால் ஆயுதம் எதுவும் தேவைஇல்லை ஒ யுவா ஒ யுவா ஒ யுவா ஒ யுவா ஒ யுவா ஒ யுவா ஜனகனமன ஜனங்களை நினை கனவுகள் வெல்ல காரியம் துணை அச்சத்தை விடு லட்சியம் தொடு வேற்றுமை விடு வெற்றியை தொடு தோழா போராடு மலைகளில் நுழைகின்ற நதியென சுழல்வழி அமைத்து படை நடத்து அட வெற்றிக்கு பக்கத்தில் முற்றத்தின் சுற்றத்தை நிறுத்து நல்லவர் யாவரும் ஒதுங்கி கொண்டால் நரிகளின் நாட்டாமை தொடங்கிவிடும் வாலிப கூட்டணி வாள் எடுத்தால் வலப்ப...

எனக்கொரு சிநேகிதி (Enakkoru snegidhi)

படம்: பிரியமானவளே உணர்வு: ஏக்கம் எனக்கொரு சிநேகிதி சிநேகிதி தென்றல் மாதிரி நீயொரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி உன்முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்து கொள்கிறேன் பூக்களின் காதில் செல்லமாய் உன் பேர் சொல்லி பார்க்கிறேன் எனக்கொரு சிநேகிதி சிநேகிதி தென்றல் மாதிரி நீயொரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி உன்முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்து கொள்கிறேன் பூக்களின் காதில் செல்லமாய் உன் பேர் சொல்லி பார்க்கிறேன் மேகம் அது சேராது வான்மழையும் வாராது தனிமையில் தவித்தேனே உன்னை எண்ணி இளைத்தேனே மேலிமையும் வாராது கீழிமையும் சேராது உனக்கது புரியாதா இலக்கணம் தெரியாதா சம்மதங்கள் உள்ளபோதும் வார்த்தை ஒன்றை சொல்ல வேண்டும் வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டி போடும் மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிவிடுமே கைவளையல் குலுங்காமல் கால்கொலுசு சிணுங்காமல் அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும் மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல கனவுகள் ஒருகோடி நீ கொடு என் தோழி உன்னை தந்து என்னை நீயும் வாங்கி கொண்டு நாட்களாச்சு உன்னை தொட்ட பின்புதானே முட்கள் கூட பூக்களாச்சு விரல்க...

என்ன அழகு எத்தனை அழகு (Enna azhagu eththanai azhagu)

படம்: Love Today உணர்வு: ஏக்கம் என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்றெந்தன் கை சேர்ந்ததே சின்ன அழகு சித்திர அழகு சிறுநெஞ்சை கொத்திய அழகு இன்றெந்தன் தோள் சாய்ந்ததே எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள் ஒரே சொல்லில் மனசை தைத்தாள் சுட்டும் விழிப்பர்வையில் சுகம் வைத்தாள் நான் காதலின் கடலில் விழுந்து விட்டேன் நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன் என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்றெந்தன் கை சேர்ந்ததே அன்பே உன் ஒற்றை பார்வை அதைத்தானே யாசித்தேன் கிடையாதென்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன் நான்காண்டு தூக்கம் கேட்டு இன்றுன்னை சந்த்திதேன் காற்றும் கடலும் நிலமும் அடி தீக்கூட தித்திதேன் மாணிக்க தேரே உன்னை மலர்கொண்டு பூசித்தேன் என்னை நான் கிள்ளி இது நிஜம் தான சோதித்தேன் இது போதுமே இது போதுமே இனி என் கால்கள் வான் போகுமே என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்றெந்தன் கை சேர்ந்ததே நான் கொண்ட ஆசையெல்லாம் நான்காண்டு ஆசைதான் உறங்கும் போதும் ஒலிக்கும் அடி உன் கொலுசின் ஓசை தான் நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாற்றின் நெஞ்சம் தான் ...

கண்ணின் காந்தமே வேண்டாம் (Kannin ganthamae vendam)

படம்: மௌனம் பேசியதே கண்ணின் காந்தமே வேண்டாம் உன் மனதின் சாந்தமே போதும் நம் உள்ளம் உறங்கவே வேண்டாம் நம் விழிகள் உறங்கினால் போதும் தடைகள் இனியில்லை வாழ்வில் நாம் விண்ணை தாண்டியே போவோம் அழகே அமுதே கண்ணின் காந்தமே வேண்டாம் உன் மனதின் சாந்தமே போதும் நம் உள்ளம் உறங்கவே வேண்டாம் நம் விழிகள் உறங்கினால் போதும் தடைகள் இனியில்லை வாழ்வில் நாம் விண்ணை தாண்டியே போவோம் யாரோடும் வாழும் வாழ்க்கை அது வேண்டாம் பெண்ணே உயிரோடு வாழும் காலம் அது உனக்கு மட்டுமே நீயெந்தன் மடி சேர ஒரு போர்வைக்குள் துயில் கொள்ள உன் கண்ணீரை துடைத்து கொள்ளு ஏ பெண்ணே கடல் வானும் காதல் செய்யும் நம் பின்னே உன்னில் நிறைஞ்சிருக்கேன் எனக்கே தெரியலையே பெண்ணை நான் பிறந்த ரகசியம் புரிகிறதே கண்ணின் காந்தமே வேண்டாம் உன் மனதின் சாந்தமே போதும் நம் உள்ளம் உறங்கவே வேண்டாம் நம் விழிகள் உறங்கினால் போதும் தடைகள் இனியில்லை வாழ்வில் நாம் விண்ணை தாண்டியே போவோம் அழகே அமுதே நான் சேர்ந்த சொந்தம் நீ தான் நீ இரண்டாம் தாயே தவமாக கிடந்தேன் தனியே நான் உன்னில் கலக்கவே தனிமைக்கே விடுமுறையா நாம் இதழ் சேர்ப்போம் ...

சின்னச்சின்னதாய் பெண்ணே (Chinna chinnathai pennae)

படம்: மௌனம் பேசியதே உணர்வு: வேதனை சின்னச்சின்னதாய் பெண்ணே என் நெஞ்சில் முட்களாய் தைத்தாய் இருவிழியை வாள் கொண்டு வீசி இளமனதில் காயங்கள் செய்தாய் துன்பம் மட்டும் என் உறவா உனை காதல் செய்ததே தவறா உயிரே.... உயிரே.... காதல் செய்தால் பாவம் பெண்மை எல்லாம் மாயம் உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே பெண்கள் கண்ணில் சிக்கும் ஆண்கள் எல்லாம் பாவம் உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே காதல் வெறும் மேகம் என்றேன் அடைமழையாய் வந்தாய் மழையோடு நனைத்திட வந்தேன் நீ தீயை மூட்டினாய் மொழியாக இருந்தேனே உன்னால் இசையாக மலர்ந்தேனே என் உயிரோடு கலந்தவள் நீயே ஏ பெண்ணே கனவாகி கலைந்ததும் ஏனோ சொல் கண்ணே மௌனம் பேசியதே உனக்கது தெரியலையா காதல் வார்த்தைகளை கண்கள் அறியலையா காதல் செய்தால் பாவம் பெண்மை எல்லாம் மாயம் உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே பெண்கள் கண்ணில் சிக்கும் ஆண்கள் எல்லாம் பாவம் உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே உனையின்றி தனியாய் சென்றேன் என் நிழலாய் வந்தாய் விடை தேடும் மாணவன் ஆனேன் என் விடையும் நீயென வந்தாயே என் வழியில் காதல் தந்தாயே உன் மொழியில் என் நெஞ்சில் காதல் வந்து நான...

Mercury பூக்கள் Model நிலாக்கள் (Mercury Pookkal Model nilakkal)

Image
படம்: ரட்சகன் ஆக்கம்: வைரமுத்து Mercury பூக்கள் Model நிலாக்கள் வரும் போது ஜொலிக்கும் பூமி Rainbow மீன்கள் Rangeela மான்கள் வலை வீசி தோற்றார்கள் வாலிபகர்கள் மின்னலே மின்னலே ஜன்னலே ஜன்னலே கீழிறங்கும் மின்னலே விளக்கேற்றும் ஜன்னலே ஒரு கண்பார்வை தான் பட்டால் இனி எல்லாமே மாறும் We want POWER வேண்டும் வேண்டும் POWER We want POWER வேண்டும் வேண்டும் POWER Mercury பூக்கள் Model நிலாக்கள் வரும் போது ஜொலிக்கும் பூமி Autograph நாங்கள் போட்ட Paper கூடத்தான் USA Dollarஆய் மாறும் Bill Clinton White House கூட நாங்கள் சென்றாலே அழகே வாவென கூறும் நாங்கள் தொட்டால் Rickshaw தான் Gypsy ஆகுமே கைகள் பட்டால் கூவம் ஏன் Pepsi ஆகுமே சிவந்தால் Bandit Queen போலே சிலிர்த்தால் Baywatch Girls போலே நாங்கள் சொல்லும் பக்கம் தான் தேசம் திரும்பும் இங்கே தான் நட்டநடு இரவில் கூட வெயில் அடிக்கும் We want POWER வேண்டும் வேண்டும் POWER We want POWER வேண்டும் வேண்டும் POWER Mercury பூக்கள் Model நிலாக்கள் வரும் போது ஜொலிக்கும் பூமி Washington Stonewa...

சின்னத்தாயவள் தந்த (Chinnathaayaval thantha)

படம்: தளபதி உணர்வு: தாய்மை, ஏக்கம் சின்னத்தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ உந்தன் கண்ணில் ஏன்தான் நீரோ தாய் அழுதாளே நீ வர நீ அழுதாயே தாய் வர தேய்பிறை காணும் வெண்ணிலா தேய்வது உண்டோ என் நிலா உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட மெத்தை போல் உன்னை மெல்ல தாங்கிட விழி மூடாதோ சின்னத்தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே பால்மனம் வீசும் பூமுகம் பார்க்கையில் பொங்கும் தாய்மனம் ஆயிரம் காலம் ஓர் வரம் வேண்டிட வந்த பூச்சரம் வெயில் வீதியில் வாடகூடுமோ தெய்வ கோயிலை சென்று சேருமோ எந்தன் தேனாறே சின்னத்தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே சின்னத்தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ உந்தன் கண்ணில் ஏன்தான் நீரோ சின்னத்தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

யமுனை ஆற்றிலே (Yamunai aatrilae)

Image
படம்: தளபதி யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடு தான் ஆட பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடு தான் ஆட பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லையே கூட இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்குமங்குமே தேட இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லையே கூட இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்குமங்குமே தேட ஆயர்பாடியில் கண்ணனில்லையோ ஆசைவைப்பதே அன்பு தொல்லையோ ஆயர்பாடியில் கண்ணனில்லையோ ஆசைவைப்பதே அன்பு தொல்லையோ பாவம் ராதா யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடு தான் ஆட பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட

பாட்டு பாடவா (Pattu paadava)

Image
படம்: தேன்நிலவு உணர்வு: ஏக்கம் பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா நான் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா நான் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா மேக வண்ணம் போலே மிண்ணும் ஆடையினாலே மலை மேனியெல்லாம் முடுதம்மா நாணத்தினாலே மேக வண்ணம் போலே மிண்ணும் ஆடையினாலே மலை மேனியெல்லாம் முடுதம்மா நாணத்தினாலே பக்கமாக வந்தபின்னும் வெட்கமாகுமா இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா பக்கமாக வந்தபின்னும் வெட்கமாகுமா இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா மாலையல்லவா நல்ல நேரமல்லவா இன்னும் வானம் பார்த்த பூமிபோல வாழலாகுமா பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா நான் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா அங்கமெல்லாம்...

காட்டுக்குயிலு மனசுக்குள்ள (Kaattu kuyilu manasukkula)

Image
படம்: தளபதி உணர்வு: நட்பு காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுகென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டி ஆடத்தான் எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பதிலே தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுகென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டி ஆடத்தான் போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசையெல்லாம் சுட்டு தள்ளு புதுசா இப்போ பிறந்தோம் என்று எண்ணி கொள்ளடா டோய் பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்ன தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா டோய் உதக்காத்து வீச உடம்புக்குள்ள கூச குப்பகூளம் பத்தவச்சு காயலாம் தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை பொங்க பாலு வெள்ளம் போல பாயலாம் அச்சுவெல்லம் பச்சரிசி வெட்டி வச்ச செங்கரும்பு அத்தனையும் தித்திக்கிற நாள் தான் காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுகென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டி ஆடத்தான் எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பதிலே காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுகென்...

நீ ஆண்டவனா தாய் (Nee aandavana thaai)

Image
படம்: வானமே எல்லை நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உன்னகில்லையே கண்ணா நான் உன் ஜாதி தான் உறவென்பதே எனக்கில்லையே கண்ணீர் என்ன கண்ணா அட நான் உன் மாமனே மண்ணில் வந்ததாலே நீயும் மண்ணின் மைந்தனே தாய் பாஷை அறியாத புது இந்தியன் நீஎன்றால் பொய்யில்லையே தன் ஜாதி சொல்லாமல் நீ வாழ்கிறாய் உன் போலே ஊரில்லையே இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய் ஒரு கண்ணால் பார்க்கிறாய் ஒதுக்கீடு கேட்கிறாய் தாலாட்டிட வழியுண்டு வளர்வாய் பிறையே பால் ஊட்டிட வழியில்லை அது தான் குறையே உந்தன் சோகம் சொன்னால் உன் ஏக்கம் போய் விடும் எங்கள் சோகம் சொன்னால் உன் தூக்கம் போய் விடும் நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உன்னகில்லையே கண்ணா நான் உன் ஜாதி தான் உறவென்பதே எனக்கில்லையே கண்ணீர் என்ன கண்ணா அட நான் உன் மாமனே மண்ணில் வந்ததாலே நீயும் மண்ணின் மைந்தனே ஆரோ ஆரோ ஆரோ ஆரீராரோ கலைகின்ற மேகங்கள் சபை கூடியே வான்வெளியை தாலாட்டுதே கரைகின்ற பிறை ஐந்து கை வீசியே சூரியனை தாலாட்டுதே முடியாத யாத்திரை முடிகின்ற வேளையில் முத்தங்கள் தந்து நீ முள்ளானாய் சேலையில் நீஎன்பது என்வாழ்வில் வரவா செலவா முள்ளென்பது ரோஜாவா உறவா ப...

ஹே master don't care master

Image
படம்: செல்வா உணர்வு: தன்னம்பிக்கை ஹே master don't care master நாம தான் மன்னரு எப்பவும் winnerஉ ஹே success வேலை success கொட்டுடா மேளத்த தட்டுடா தாளத்த நம்மோட சாதனை பேசனும் ஊரு தான் guinness book ல ஏறனும் பேரு தான் வந்தாகணும் எந்நாளும் நம்ப route ஹே master don't care master நாம தான் மன்னரு எப்பவும் winnerஉ ஹே master don't care master நாம் இழுக்கிற இழுப்புக்கு பூமியும் வரணும் அட தேர் இழுக்கிற இழுப்புக்கு சாமியும் வரணும் ஊரு உலகம் ஆளனும் இளைய தலைமுறை நமக்குள் நாமே தேடனும் புதிய தலைவரை அஞ்சுகிற ஏழை நெஞ்சமும் கோழை நெஞ்சமும் நல்லால்ல அச்சமின்றி பாட்டு வைக்கணும் தில்லாலே கல்லும் மண்ணும் போட்டு வைக்கின்ற ரூட் எப்பவும் தப்பாதே எத்தனுக்கு வேட்டு வைக்கணும் இப்போது நம்ம கால் பட்டதும் கை பட்டதும் கல்லும் முள்ளும் பொன்னாகும் ஹே master don't care master நாம தான் மன்னரு எப்பவும் winnerஉ ஹே master don't care மாஸ்டர் போர் நடத்துற முறையில நாமொரு கஜினி ஊரில் பேர் எடுக்கற வகையில நாமொரு ரஜினி பேட்டை நம்ம பேட்டை தான் கேள்வி இல்லையடா கோட...

வண்ணம் கொண்ட வெண்ணிலவே (Vannam konda vennilavae)

படம்: சிகரம் உணர்வு: ஏக்கம் வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை வண்ணம் கொண்ட வெண்ணிலவே  பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லை சொந்தத்தில் பாஷை இல்லை சுவாசிக்க ஆசை இல்லை பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லை சொந்தத்தில் பாஷை இல்லை சுவாசிக்க ஆசை இல்லை கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை நீலத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லி கொள்ள வாழ்க்கை இல்லை வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன் நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன் நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன் ஜீவன் வந்து சேரும் வரை பிரேதம் போல் நான் கிடப்பேன் தேவி வந்து சேர்ந்து விட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன் வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ வி...

நேற்று இல்லாத மாற்றம் (Netru illaatha matram)

படம்: புதிய முகம் நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் வாழ்க்கை என்பதா விதியின் வேட்கை என்பதா சதியின் சேர்கை என்பதா சொல்மனமே நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று உன் காதில் ஏதோ சொன்னது இதுதான் வாழ்க்கை என்பதா விதியின் வேட்கை என்பதா சதியின் சேர்கை என்பதா சொல்மனமே கொடியில் பூக்கள் எல்லாம் காம்பு தாங்கும் வரை கூந்தல் பூக்கள் எல்லாம் உறவு வாழும் வரை காதல் நினைவொன்று தானே காற்று தீரும் வரை மழையின் பயணமெல்லாம் மண்ணை தீண்டும் வரை படகின் பயணமெல்லாம் நதியை தாண்டும் வரை மனித பயணங்கள் எல்லாம் வாழ்க்கை தீரும் வரை நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று உன் காதில் ஏதோ சொன்னது இதுதான் வாழ்க்கை என்பதா விதியின் வேட்கை என்பதா சதியின் சேர்கை என்பதா சொல்மனமே காற்று வழிபோவதை நாற்று சொல்கிறது நேற்று மழை பெய்ததை ஈரம் சொல்கிறது கண்ணில் வழிகின்ற கண்ணீர் காதல் சொல்கிறது இலைகள் வீழ்ந்தாலுமே கிளையில் துளிர் உள்ளது இரவு தீர்ந்தாலுமே இன்னும் நிலவுள்ளது பாதி உயிர் போன போதும் மீதி வாழ்வுள்ளது நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று உன் காதில் ஏதோ சொன...

பூங்கொடி தான் பூத்ததம்மா (Poongodi thaan poothathamma)

படம்: இதயம் உணர்வு: தன்னம்பிக்கை பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்ததம்மா பாட்டெடுக்க தாமதிக்க வாடை காற்று பூப்பறித்து போனதம்மா பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்ததம்மா பாட்டெடுக்க தாமதிக்க வாடை காற்று பூப்பறித்து போனதம்மா ஆசைக்கு தாள் போட்டு அடைத்தென்ன லாபம் அதுதானே குடம் தன்னில் எரிகின்ற தீபம் மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம் மழை நீரை பொழியாமல் இருகின்ற மேகம் சிலருக்கு சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையை போல் ஓ ஓ... பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்ததம்மா பாட்டெடுக்க தாமதிக்க வாடை காற்று பூப்பறித்து போனதம்மா தாய் கூட அழுகின்ற பிள்ளைக்கு தானே பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள் உன்வீட்டு கண்ணாடி ஆனாலும் கூட முன்வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே மனதுக்குள் பலகோடி நினைவுகள் இருந்தாலும் உதடுகள் திறந்தால் தான் உதவிகள் பெறக்கூடும் கோழைக்கு காதலென்ன ஊமைக்கு பாடலென்ன ஓ ஓ... பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்ததம்மா பாட்டெடுக்க தாமதிக...

நலம் வாழ எந்நாளும் (Nalam vaazha ennalum)

Image
படம்: மறுபடியும் உணர்வு: தன்னம்பிக்கை நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளம்தென்றல் உன் மீது பன்பாடும் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளம்தென்றல் உன் மீது பன்பாடும் நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம் மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம் இலக்கணம் சில நேரம் பிழையாகலாம் எழுதிய அன்பு இலக்கியம் தவறாகுமா விரல்களை தாண்டி வளர்ந்ததை கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது கடல்களில் உருவாகும் அலையானது விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது நிலவினை நம்பி இரவுகள் இல்லை விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன் நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் ...

என்னவளே அடி என்னவளே (Yennavalae adi yennavalae)

படம்: காதலன் உணர்வு: ஏக்கம் ஆக்கம்: வைரமுத்து என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்து விட்டேன் உன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன் காலடி தேடி வந்தேன் காதலென்றால் பெரும் அவஸ்த்தை என்று உனை கண்டதும் கண்டு கொண்டேன் எந்தன் கழுத்துவரை இந்த காதல் வந்து இரு கண்விழி பிதுங்கி நின்றேன் என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும் உருளுதடி காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி கண்களெல்லாம் எனை பார்ப்பது போல் ஒரு கலக்கமும் தோன்றுதடி இது சுவர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும் உன் வார்த்தையில் உள்ளதடி என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டு கண்ணடிப்பேன் கோபுரமே உன்னை சாய்த்து கொண்டு உந்தல் கூந்தலில் மீன் பிடிப்பேன் வெண்ணிலவே உன்னை தூங்க வைக்க உந்தன் ...

பெண்ணல்ல பெண்ணல்ல (Pennalla pennalla)

படம்: உழவன் உணர்வு: வியப்பு ஆக்கம்: வாலி பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னிர்ப்பூமைவிழி ஜாடைகள் முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ சித்திரை மேனி தாழம்பூ சேலை அணியும் ஜாதிப்பூ சிற்றிடை மீது வாழைப்பூ ஜொலிக்கும் செண்பகப்பூ பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ தென்றலை போல நடப்பவள் என்னை தழுவ காத்து கிடப்பவள் செந்தமிழ் நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள் சிந்தையில் தாவும் பூங்கிளி அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி அஞ்சுகம் போல இருப்பவள் கொட்டும் அருவி போல சிரிப்பவள் மெல்லிய தாமரை காலெடுத்து நடையை பழகும் பூந்தேரு மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ சித்திரை மாத நிலவொளி அவள் சில்லென தீண்டும் பனித்துளி கொஞ்சிடும் பாத கொலுசுகள் அவை கொட்டிடும் காதல் முரசுகள் பழத்தை போல ...

காதல் வைபோகமே (Kadhal Vaibogame)

Image
படம்: சுவரில்லாத சித்திரங்கள் ஆக்கம்: கவிஞர் கண்ணதாசன் காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் ஜோடிகிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் ஜோடிகிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே கோடை காலத்து தென்றல் குளிரும் பௌர்ணமி திங்கள் வாடை காலத்தில் கூடல் விளையாடல் ஊடல் வானம் தாலாட்டு பாட மலைகள் பொன் ஊஞ்சல் போட நீயும் என்கையில் ஆட சுகம் தேட கூட பூவில் மேடை அமைத்து பூவை உன்னை அணைத்தால் கதகதப்பு துடிதுடிப்பு இது கல்யாண பரபரப்பு காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் ஜோடிகிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே எண்ணம் என் எண்ண வண்ணம் இளமை பொன்னென்று மின்னும் எங்கும் ஆனந்த ராகம் புது தாகம் தாபம் மேகலை பாடிடும் ராகம் ராகங்கள் பாடிடும் தேகம் தேகத்தில் ஊறிய மோகம் சமபோகம் யோகம் வாழ்ந்தால் உந்தன் மடியில் வளர்ந்தால் உந்தன் அருகில் அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன் ஏழேழு ஜென்மம் எடுப்பேன் காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் ஜோடிகிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே

முதல் முதலாக காதல் duet (Muthal Muthalaga Kadhal Duet)

Image
படம்: நிறம் மாறாத பூக்கள் முதல் முதலாக காதல் duet பாடவந்தேனே முதல் முதலாக காதல் duet பாடவந்தேனே என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே முதல் முதலாக காதல் duet பாடவந்தேனே சீதா என் காதல்கொடியே கண் பாரம்மா ஆதாரம் நீயில்லாமல் வேறேதம்மா (ஒ ஒ ஒ...) சீதா என் காதல்கொடியே கண் பாரம்மா ஆதாரம் நீயில்லாமல் வேறேதம்மா (ஒ ஒ ஒ...) ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று மோசம் செய்த துரோகியே முன்கோபம் தேவை தான அன்பே ஆருயிரே அது யாரந்த பெண் ஒரு நடிகையம்மா அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு முதல் முதலாக காதல் duet பாடவந்தாயோ நீ காதல் மன்மதனோ நான் பறந்து போவேனோ முதல் முதலாக காதல் duet பாடவந்தேனே எழிலோர் சிற்பமாக என் எதிரில் நாணி மறைந்திடுவாள் ஜீனத் என் கனவில் வந்தாள் உன்போலவே சிங்காரப்பாவை உந்தன் வடிவாகவே (ஒ ஒ ஒ...) ஜீனத்தன் கனவில் வந்தாள் உன்போலவே சிங்காரப்பாவை உந்தன் வடிவாகவே (ஒ ஒ ஒ...) ஜீனத்தமன் போல என்னை எண்ணி வந்து பாட்டு பாடும் ஜோதியே ஐயையோ சும்மா தான் ஜாடை சொன்னேன் கண்ணே கண்மணியே எனை போல் ஒருப்பென் இந்த உலகில் இல்லை ஒரு நடிகையை போலென்னை பார்ப்பது தவறு முதல் முதலாக காதல் ...

ஊதா ஊதா ஊதாப்பூ (Ootha ootha oothapoo)

Image
படம்: மின்சார கண்ணா உணர்வு: பாசம் ஊதா ஊதா ஊதாப்பூ ஊதும் வண்டு ஊதாப்பூ ஊதா ஊதா ஊதாப்பூ ஊதக்காற்று மோதாப்பூ நான் பார்த்தால் ஊதாப்பூவே நாலாம் தானா ஊதாப்பூவே தேன் வார்த்த ஊதாப்பூவே சுகம் தானா ஊதாப்பூவே ஊதா ஊதா ஊதாப்பூ இன்றும் என்றும் உதிராப்பூ ஊதா ஊதா ஊதாப்பூ ஊதும் வண்டு ஊதாப்பூ ஊதா ஊதா ஊதாப்பூ ஊதக்காற்று மோதாப்பூ நீ  பார்த்தால் ஊதாப்பூவே நலமாகும் ஊதாப்பூவே தோள் சேர்த்தல் ஊதாப்பூவே சுகம் காணும் ஊதாப்பூவே ஊதா ஊதா ஊதாப்பூ உன்னை நீங்கி வாழாப்பூ ஓர் உயில் தீட்டி வைத்தேன் நான் உனக்காக என்று என் உயிர் கூட இல்லை இனி எனக்காக என்று ஓர் நெடும்சாலை தன்னை நான் கடந்தேனே அன்று எனை நிலம் கேட்டதம்மா உன் நிழல் எங்கே என்று உன்னில் நான் ஒருபாதி என்றே தெரியாதோ அன்பே நீ அதை சொல்லுவதேன் புரியாதோ ஊதா ஊதா ஊதாப்பூ உன் பேர் தவிர ஓதா பூ உன் மழைகூந்தல் மீது என் மனப்பூவை வைத்தேன் ஓர் உயிர் நூலைக்கொண்டு இரு உடல் சேர தைத்தேன் உன் விழிப்பார்வை அன்று என்னை ஒரு விலை பேசக்கண்டேன் நீ எனை வாங்கும் முன்பு நான் உனை வாங்கி கொண்டேன் எந்தன் காதலி சொல்வதே இனி ஆணை என்றும் தாவணி வென்றிடுமோ ஒரு ஆணை ஊ...

மடைதிறந்து தாவும் (Madai thiranthu)

Image
படம்: நிழல்கள் மடைதிறந்து தாவும் நதியலை நான் மனம்திறந்து கூவும் சிறுகுயில் நான் இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது காலம் கனிந்தது கதவுகள் திறந்ததுஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது புதுராகம் படிப்பதாலே நானும் இறைவனே புதுராகம் படிப்பதாலே நானும் இறைவனே விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான் மடைதிறந்து தாவும் நதியலை நான் மனம்திறந்து கூவும் சிறுகுயில் நான் இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம் இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம் வரும் காலம் வசந்த காலம் நாளும் மங்கலம் வரும் காலம் வசந்த காலம் நாளும் மங்கலம் இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான் மடைதிறந்து தாவும் நதியலை நான் மனம்திறந்து கூவும் சிறுகுயில் நான் இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது