சின்னத்தாயவள் தந்த (Chinnathaayaval thantha)

படம்: தளபதி
உணர்வு: தாய்மை, ஏக்கம்

சின்னத்தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன்தான் நீரோ

தாய் அழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்ல தாங்கிட
விழி மூடாதோ

சின்னத்தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

பால்மனம் வீசும் பூமுகம்
பார்க்கையில் பொங்கும் தாய்மனம்
ஆயிரம் காலம் ஓர் வரம்
வேண்டிட வந்த பூச்சரம்
வெயில் வீதியில் வாடகூடுமோ
தெய்வ கோயிலை சென்று சேருமோ
எந்தன் தேனாறே

சின்னத்தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

சின்னத்தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன்தான் நீரோ

சின்னத்தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)