பூங்கொடி தான் பூத்ததம்மா (Poongodi thaan poothathamma)

படம்: இதயம்
உணர்வு: தன்னம்பிக்கை

பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க வாடை காற்று பூப்பறித்து போனதம்மா

பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க வாடை காற்று பூப்பறித்து போனதம்மா

ஆசைக்கு தாள் போட்டு அடைத்தென்ன லாபம்
அதுதானே குடம் தன்னில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழை நீரை பொழியாமல் இருகின்ற மேகம்
சிலருக்கு சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையை போல் ஓ ஓ...

பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க வாடை காற்று பூப்பறித்து போனதம்மா

தாய் கூட அழுகின்ற பிள்ளைக்கு தானே
பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள்
உன்வீட்டு கண்ணாடி ஆனாலும் கூட
முன்வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே
மனதுக்குள் பலகோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால் தான் உதவிகள் பெறக்கூடும்
கோழைக்கு காதலென்ன ஊமைக்கு பாடலென்ன ஓ ஓ...

பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க வாடை காற்று பூப்பறித்து போனதம்மா

பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்ததம்மா
பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்ததம்மா

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)