நீ ஆண்டவனா தாய் (Nee aandavana thaai)

படம்: வானமே எல்லை

நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உன்னகில்லையே
கண்ணா நான் உன் ஜாதி தான் உறவென்பதே எனக்கில்லையே
கண்ணீர் என்ன கண்ணா அட நான் உன் மாமனே
மண்ணில் வந்ததாலே நீயும் மண்ணின் மைந்தனே

தாய் பாஷை அறியாத புது இந்தியன் நீஎன்றால் பொய்யில்லையே
தன் ஜாதி சொல்லாமல் நீ வாழ்கிறாய் உன் போலே ஊரில்லையே
இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய்
ஒரு கண்ணால் பார்க்கிறாய் ஒதுக்கீடு கேட்கிறாய்
தாலாட்டிட வழியுண்டு வளர்வாய் பிறையே
பால் ஊட்டிட வழியில்லை அது தான் குறையே
உந்தன் சோகம் சொன்னால் உன் ஏக்கம் போய் விடும்
எங்கள் சோகம் சொன்னால் உன் தூக்கம் போய் விடும்

நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உன்னகில்லையே
கண்ணா நான் உன் ஜாதி தான் உறவென்பதே எனக்கில்லையே
கண்ணீர் என்ன கண்ணா அட நான் உன் மாமனே
மண்ணில் வந்ததாலே நீயும் மண்ணின் மைந்தனே

ஆரோ ஆரோ ஆரோ ஆரீராரோ

கலைகின்ற மேகங்கள் சபை கூடியே வான்வெளியை தாலாட்டுதே
கரைகின்ற பிறை ஐந்து கை வீசியே சூரியனை தாலாட்டுதே
முடியாத யாத்திரை முடிகின்ற வேளையில்
முத்தங்கள் தந்து நீ முள்ளானாய் சேலையில்
நீஎன்பது என்வாழ்வில் வரவா செலவா
முள்ளென்பது ரோஜாவா உறவா பகையா
காலம் செய்த கோலம் நீ இங்கே வந்தது
கண்ணீரோடு வந்து கண்ணீர் சேர்ந்தது

நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உன்னகில்லையே
கண்ணா நான் உன் ஜாதி தான் உறவென்பதே எனக்கில்லையே
கண்ணீர் என்ன கண்ணா அட நான் உன் மாமனே
மண்ணில் வந்ததாலே நீயும் மண்ணின் மைந்தனே


Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)