நேற்று இல்லாத மாற்றம் (Netru illaatha matram)

படம்: புதிய முகம்

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சதியின் சேர்கை என்பதா
சொல்மனமே

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று உன் காதில் ஏதோ சொன்னது
இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சதியின் சேர்கை என்பதா
சொல்மனமே

கொடியில் பூக்கள் எல்லாம் காம்பு தாங்கும் வரை
கூந்தல் பூக்கள் எல்லாம் உறவு வாழும் வரை
காதல் நினைவொன்று தானே காற்று தீரும் வரை
மழையின் பயணமெல்லாம் மண்ணை தீண்டும் வரை
படகின் பயணமெல்லாம் நதியை தாண்டும் வரை
மனித பயணங்கள் எல்லாம் வாழ்க்கை தீரும் வரை

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று உன் காதில் ஏதோ சொன்னது
இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சதியின் சேர்கை என்பதா
சொல்மனமே

காற்று வழிபோவதை நாற்று சொல்கிறது
நேற்று மழை பெய்ததை ஈரம் சொல்கிறது
கண்ணில் வழிகின்ற கண்ணீர் காதல் சொல்கிறது
இலைகள் வீழ்ந்தாலுமே கிளையில் துளிர் உள்ளது
இரவு தீர்ந்தாலுமே இன்னும் நிலவுள்ளது
பாதி உயிர் போன போதும் மீதி வாழ்வுள்ளது

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று உன் காதில் ஏதோ சொன்னது
இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சதியின் சேர்கை என்பதா
சொல்மனமே

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)