காதல் வைபோகமே (Kadhal Vaibogame)

படம்: சுவரில்லாத சித்திரங்கள்
ஆக்கம்: கவிஞர் கண்ணதாசன்

காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய்
ஜோடிகிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே
காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய்
ஜோடிகிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே

கோடை காலத்து தென்றல் குளிரும் பௌர்ணமி திங்கள்
வாடை காலத்தில் கூடல் விளையாடல் ஊடல்
வானம் தாலாட்டு பாட மலைகள் பொன் ஊஞ்சல் போட
நீயும் என்கையில் ஆட சுகம் தேட கூட
பூவில் மேடை அமைத்து பூவை உன்னை அணைத்தால்
கதகதப்பு துடிதுடிப்பு இது கல்யாண பரபரப்பு

காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய்
ஜோடிகிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே

எண்ணம் என் எண்ண வண்ணம் இளமை பொன்னென்று மின்னும்
எங்கும் ஆனந்த ராகம் புது தாகம் தாபம்
மேகலை பாடிடும் ராகம் ராகங்கள் பாடிடும் தேகம்
தேகத்தில் ஊறிய மோகம் சமபோகம் யோகம்
வாழ்ந்தால் உந்தன் மடியில் வளர்ந்தால் உந்தன் அருகில்
அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன் ஏழேழு ஜென்மம் எடுப்பேன்

காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய்
ஜோடிகிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே



Comments

Post a Comment

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)