பூங்காற்றிலே உன் சுவாசத்தை (Poongatrilae un swasathai)

படம்: உயிரே 

கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேலொரு துளி வீழ்ந்ததே அதை தேடித்தேடி பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே என் விழி உன்னை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேலொரு துளி வீழ்ந்ததே அதை தேடித்தேடி பார்த்தேன்

காற்றின் அலைவரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா
நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதை செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்ப்பேன்
ஓயும் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேலொரு துளி வீழ்ந்ததே அதை தேடித்தேடி பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே என் விழி உன்னை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன்
கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை

வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன்வாசம்
வெறும் வாசம் வாழ்க்கை இல்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேலொரு துளி வீழ்ந்ததே அதை தேடித்தேடி பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே என் விழி உன்னை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேலொரு துளி வீழ்ந்ததே அதை தேடித்தேடி பார்த்தேன்

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)