தென்பாண்டி தமிழே (Thenpaandi thamizhe)

படம்: பாசப்பறவைகள்
உணர்வு: பாசம்
ஆக்கம்: மு. கருணாநிதி

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசமென்னும் ஆலயம் உன்னை பாட வேண்டும் ஆயிரம்


தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே

வாழ்த்தி உன்னை பாடவே வார்த்தை தோன்றவில்லையே
பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே
அன்பு என்னும் கூண்டிலே ஆடிப்பாடும் பூங்குயில்
ஆசை தீபம் ஏற்றுதே அண்ணன் உன்னை போற்றுதே
தாவி வந்த பிள்ளையே தாயை பார்த்ததில்லையே
தாவி வந்த பிள்ளையே தாயை பார்த்ததில்லையே
தாயை போல பார்கிறேன் வேறு பார்வை இல்லையே
மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே
நீ என்றும் வாழ வேண்டுமே 

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசமென்னும் ஆலயம் உன்னை பாட வேண்டும் ஆயிரம்
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே

தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்று தானம்மா
அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மா
கோவில் தேவையில்லையே நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் நாவிலே என்றும் வாழும் தேவனே
கூடுவாழும் குருவிகள் பாடும் பாசப்பறவைகள்
கூடுவாழும் குருவிகள் பாடும் பாசப்பறவைகள்
வாழ்த்துவேன் உனைப் போற்றுவேன்
வாழ்வெல்லாம் உன்னை ஏற்றுவேன்
காலம் காலம் யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுவேன்
நாம் சேர்ந்து வாழ வேண்டுவேன்

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசமென்னும் ஆலயம் உன்னை பாட வேண்டும் ஆயிரம்
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே

Comments

  1. கலைஞர் அவர்களின் ஆக்கம் என்றும் அழியாத ஓவியம்.அவர் ஒரு காவியத்தலைவன்

    ReplyDelete
    Replies
    1. இது கங்கை அமரன் எழுதியது.கலைஞர் எழுதவில்லை"!

      Delete

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)