ஆகாசவாணி நீயே என் ராணி (Aagasa vaani neeyae en rani)

படம்: ப்ரியமுடன்
உணர்வு: ஆறுதல்
ஆக்கம்: வைரமுத்து
இசை: தேவா

ஆகாசவாணி நீயே என் ராணி सोजा सोजा
தாய் போல நானே தாலாட்டுவேனே सोजा सोजा
ஓ ப்ரியா உயிருக்கு அருகினில் இருப்பவன் நான் தானே
ஓ பிரியா இதயத்தின் சிகரத்தில் இருப்பவள் நீ தானே
கண்ணீர் ஏன் ஏன் என் உயிரே

ஆகாசவாணி நீயே என் ராணி सोजा सोजा

அதோ அதோ ஓர் பூங்குயில்
இதோ இதோ உன் வார்த்தையில்
அதோ அதோ ஓர் பொன்மயில்
இதோ இதோ உன் ஜாடையில்
யார் இந்த குயிலை அழ வைத்தது
மலர்மீது தான சுமை வைப்பது
பூக்கள் கூடி போட்டதிங்கு தீர்மானமே
உந்தன் சிரிப்பை கேட்ட பின்பு அவை பூக்குமே

ஆகாசவாணி நீயே என் ராணி सोजा सोजा

நிலா நிலா என் கூடவா
सलाम सलाम நான் போடவா
சதா சதா உன் ஞாபகம்
சுகம் சுகம் என் நெஞ்சிலே
நிலவே நிலவே வெயில் கொண்டுவா
மழையே மழையே குடை கொண்டுவா
அன்னை தந்தையாக உன்னை காப்பேனம்மா
அன்பு தந்து உன்னில் என்னை பார்ப்பேனம்மா

ஆகாசவாணி நீயே என் ராணி सोजा सोजा
தாய் போல நானே தாலாட்டுவேனே सोजा सोजा
ஓ ப்ரியா உயிருக்கு அருகினில் இருப்பவன் நான் தானே
ஓ பிரியா இதயத்தின் சிகரத்தில் இருப்பவள் நீ தானே
கண்ணீர் ஏன் ஏன் என் உயிரே

Comments

  1. உயிரோட்டமுள்ள உயர் காதலின் வைரவரிகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)